Skip to main content

தமிழ்நாடு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமா? - மத்திய அமைச்சர் விளக்கம்!

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

Is Tamil a compulsory subject in Tamilnadu Kendriya Vidyalaya schools? Central minister explanation!

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப். 13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 13ம் தேதி) துவங்கியது. இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

 

நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு இன்று துவங்கியதும் மறைந்த தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிறகு கூட்டத்தொடர் துவங்கியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

 

இதற்குப் பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 15 பள்ளிகளில் மட்டுமே தமிழ் பாடம் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 63,809 மாணவர்களில் 6,589 மாணவர்கள் மட்டுமே தமிழ் படிக்கின்றனர். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேசியக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் உருவாக்கும் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறது. நாடு முழுவதும் உள்ள மாணவர்களைக் கருத்தில் கொண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுவதால் கூடுதல் மொழியாக மட்டுமே மாநில மொழிகள் பயிற்றுவிக்கப்படும். 15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே மாநில மொழி பயிற்றுவிக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணி பாஜகவிற்கு சவாலாக இருக்கும்” - மத்திய அமைச்சர் 

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

India alliance will challenge BJP says Union Minister dharmendra pradhan

 

அடுத்தாண்டு இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், எதிர்க்கட்சிகள் உள்ளடக்கிய காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ எனப் பெயரிடப்பட்டுள்ள கூட்டணியை உருவாக்கினார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த கூட்டணியினர் பீகார், பெங்களூரு, மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். 

 

அதேபோல், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 30க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக, பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிகள் வெளியேறியுள்ளனர்.  இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு சவாலாக இருக்கும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

 

தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எந்த ஒரு தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. பிரதமர் மோடி கட்சியை நன்றாக வழிநடத்தி செல்கிறார். பாஜக கட்சி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் ஒவ்வொரு தேர்தலையும் தீவிரமாக எடுத்துக் கொள்கின்றனர். மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க பாஜக செயல்பட்டு வருகிறது” என்றார்.

 

 

Next Story

“இந்துக்கள் மீதான வன்மம் வேரூன்றி இருக்கிறது” - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Union Minister Dharmendra Pradhan says Animosity towards Hindus is rooted

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதனிடையே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பேசும்போது, “சனாதனத்தை டெங்கு மலேரியா, கொரோனா போல ஒழிக்க வேண்டும் என்று மென்மையாகத்தான் சொன்னார். மலேரியா, டெங்கு நோய்களை சமூகம் அறுவறுப்பாகப் பார்க்கக் கூடாது. ஆனால் ஒரு காலத்தில் எச்.ஐ.வி அறுவறுப்பாகப் பார்க்கப்பட்டது. ஆகையால் எங்களைப் பொறுத்தவரையில் தொழுநோய், எச்.ஐ.வி போல் சமூக அவலம் நிறைந்த நோயாகத்தான் சனாதனத்தைப் பார்க்க வேண்டும்” என்றார்.

 

இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆர். ராசாவின் கருத்து குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் எதிர்வினையாற்றியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “ பெயரை மாற்றுவதால் ஒருவரின் நோக்கத்தையும் குணத்தையும் மறைக்க முடியாது. சனாதனம் பற்றிய மூர்க்கத்தனமான மற்றும் கொடூரமான கருத்துகளை திமுக அமைச்சர் ஆ.ராசா வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இ.ந்.தி.யா கூட்டணியினுடைய இந்துக்கள் மீதான வன்மம் வேரூன்றி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் மற்றும் அதன் நண்பர்களும், உணர்வுப்பூர்வமான பாரதத்தின் ஆன்மா மற்றும் வேர்களை எப்படி களங்கப்படுத்துகிறார்கள் என்பதை நாடு பார்த்து கொண்டிருக்கிறது. சனாதனமே நித்தியமானது. சனாதனமே உண்மையானது என்பதை இந்த வெறுப்பாளர்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.