Skip to main content

ஐ.ஜி. மனைவிக்கு ரூ.3300.. ஸ்டேஷனின் செலவினக் கணக்கை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட எஸ்.ஐ....!!!

Published on 08/10/2018 | Edited on 08/10/2018



 

police station



அரசு வழக்கறிஞருக்கு இவ்வளவு... ஹலோ போலீசுக்கு இவ்வளவு... ஐ.ஜி.மனைவிக்கு இவ்வளவு.. என தங்களுடைய காவல்நிலையம் மூலம் செலவழித்த தொகையை, செலவினப் பட்டியலாக வாட்ஸ் அப் குழுவில் வெளியிட்டுள்ளார் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. ஒருவர். இதனால் தமிழக காவல்துறை வட்டாரமே கிடுகிடுத்துள்ளது.


 

police station


 

சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், தேவகோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய காவல்துறை துணைச்சரகங்களிலேயே முக்கியமானது காரைக்குடி துணைச்சரகம். இந்த காவல்துறை துணைச்சரகத்தில் மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் தவிர்த்து காரைக்குடி வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலையங்கள், அழகப்பாபுரம், சோமநாதபுரம், குன்றக்குடி, பள்ளத்தூர், சாக்கோட்டை மற்றும் செட்டிநாடு காவல் நிலையங்கள் உள்ளன. இதில் மறைமுகமாக லஞ்சப்பணமாக அதிக வருவாயை ஈட்டித்தருவது காரைக்குடி வடக்கு காவல் நிலையம் என்கின்றது புள்ளி விபரங்கள். இதனாலயே இந்த காவல்நிலையத்திற்கு போட்டி போட்டு வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் பலர் உண்டு. இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 80 போலீசார் பணியாற்றக்கூடிய இந்த ஸ்டேஷனை பொறுத்தவரை கடந்த 4 மாதமாக ஒரு இன்ஸ்பெக்டர் கூட பணி நியமனம் செய்யப்படவில்லை. அதுபோக, 50க்கும் குறைவானவர்களே இங்கு பணியாற்றி வருகின்றனர்.   


 

police station


 

18/06/2018 அன்று 75980 35565 என்ற எண் மூலம் துவக்கப்பட்டதே KARAIKUDI NORTH PS என்ற வாட்ஸ் அப் குழு. 44 நபர்கள் கொண்ட இக்குழுவின் அட்மின் ஸ்டேஷன் ஆபிஸராகப் பணியாற்றும் எஸ்.ஐ.அரவிந்த்ராஜன். 02/09/2018 முதல் 27/09/2018 வரையிலான அந்த செலவினப் பட்டியலில், " HC 1371 தனபால் வண்டிக்கு டயர் மாற்ற ரூ.1000, Girl missing சம்பந்தமாக சென்னை சென்ற எஸ்.ஐ.க்கு ரூ.2000, அரசு வழக்கறிஞருக்கு ரூ. 500 HC 1055 வசம் கொடுத்தது என ஆரம்பித்து, ஹலோ போலீசுக்கு கொடுத்தது, விநாயகர் சதுர்த்தி டிபன் செலவு, வாட்டர் பாட்டில் செலவு என பட்டியல் நீண்டு, இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் விநாயகர் சதுர்த்தியின் போது பிள்ளையார்பட்டிக்கு சுவாமி கும்பிட வந்த தென்மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன் மனைவி பர்சேஸ் செய்ததற்கு ரூ.3300 கொடுத்தது என்கிறது. இந்தப் பட்டியலைத்தான் ஸ்டேஷன் ஆபிஸரான எஸ்.ஐ.அரவிந்த்ராஜன், அவருடைய எண்ணான 75980 35565 மூலம் தங்களுடைய வாட்ஸ் அப் குழுவிலே வெளியிட்டு, அதிகாரிகளிடையே கலக்கத்தை உண்டாக்க, மேலதிகாரிகளை தன்வசம் வைத்துக் கொள்ளும் வித்தை வெளியானதுதான் உச்சம்.

 

police station

                                                                 எஸ்.ஐ.அரவிந்த் ராஜன்
 

 

police station

                                                                       முருகேஸ்வரி

அரசு தரப்பிலிருந்து ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் கொடுக்கப்படும் மாதாந்திர செலவுத் தொகையோ ரூ.3000 மட்டுமே. அப்படியிருக்க இவ்வளவு பணம் எப்படி வந்தது? "கடந்த 4 மாதங்களில் ஜூன் மாதம் 198, ஜூலை 219, ஆகஸ்ட் 191 மற்றும் செப்டம்பர் மாதத்தில் 186 என பாஸ்போர்ட்கள் விசாரணைக்காக வந்துள்ளன. பாஸ்போர்ட் என்கொயரிக்காக வரும் போது மக்களிடம் தலா ரூ.500-ஐ கட்டாயமாக வாங்க வேண்டுமென்பது எழுதப்படாத விதி. அப்படியென்றால் எவ்வளவு வருமானம் இதன் மூலம் மட்டும் வந்திருக்கும்? இத்தனை இந்தந்த போலீசாருக்கு என்று கொடுப்பது வழக்கம்.  காரைக்குடி வடக்குக் காவல்நிலையத்தைப் பொறுத்தவரை பாஸ்போர்ட் விசாரணைக்கு பொறுப்பாளரான முருகேஸ்வரி எனும் ஏட்டம்மா. அது போல், பொதுமக்களிடமிருந்துப் பெறப்படும் பணத்தைக் கொண்டு ஸ்டேஷனின் வரவு செலவு கணக்கை மெயிண்டெயின் செய்து ஸ்டேஷன் ஆபிஸரான எஸ்.ஐ.அரவிந்த்ராஜனிடம் ஒப்படைப்பதும் இவருடைய பணி. அப்படியிருக்கையில் கடந்த செப்டம்பர் மாதத்தின் வரவு செலவு கணக்கை எஸ்.ஐ.அரவிந்த்ராஜனிடம் ஒப்படைக்க, அவரோ, இதுதான் இந்த மாத கணக்கு என அதனை ஸ்டேஷனின் வாட்ஸ் அப் குழுவில் போட்டுவிட்டார். இதுதான் இப்பொழுது பூதாகரமாகியுள்ளது" என்கின்றனர் விபரமறிந்த போலீஸ்காரர்கள். இதனால் காவல்துறை வட்டாரமே கிடுகிடுத்துள்ளது என்பதுதான் உண்மை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.