Skip to main content

நக்கீரன் ஆசிரியருக்கு எதிராக வழக்கு! தமிழக அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

 

நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக கவர்னரை தொடர்புபடுத்தி நக்கீரன் பத்திரிகையில் செய்தி வெளியிட்டதால் கவர்னர் பணி செய்ய முடியாமல் தவிப்பதாக கூறி கவர்னரின் செயலாளர் சென்னை காவல்துறை ஆணையரிடம் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் உட்பட  35 ஊழியர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124 ஆவது பிரிவின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுத்த புகாரின் அடிப்படையில் 8 .10 .2018ல் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

 

Nakkheeran Gopal



9 .10 .2018 அன்று சென்னை விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் ஆசிரியரை   போலீசார் கைதுசெய்து எழும்பூர் 13வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆவணங்களையும் முதல் தகவல் அறிக்கையும் பார்வையிட்ட 13வது மாஜிஸ்திரேட் இந்திய தண்டனைச் சட்டம் 124 வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்ய போதுமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று நக்கீரன் கோபாலை ரிமாண்ட் செய்ய மறுத்து சொந்த ஜாமீனில் விடுவித்தார்.
 

இந்த,  வழக்கில் பின்னர் மீதமுள்ள நக்கீரன் ஊழியர்கள் 34 பேரும் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர். இதையடுத்து,  கடந்த பிப்ரவரி மாதம் நக்கீரன் ஆசிரியர் உட்பட 5 பேர் மீது ஜாம்பஜார் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 


 

அந்த,  குற்றப்பத்திரிகையின் படி தங்கள் மீதான வழக்கை நிரூபிக்கும் வகையில் சட்டப்படியான எந்த ஆவணங்களும் இல்லை. எனவே,  தங்கள் மீதான வழக்கு செல்லாது என அறிவித்து ரத்து செய்யக் கோரி ஐந்து பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால்  கடந்த ஜூன் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் எழும்பூர் நீதிமன்ற வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தது.
 

 இதை,  எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  அதில், கடந்த ஜூலை மாதம் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது . பின்னர்,  இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் தமிழக அரசு காட்டிய அதீத நடவடிக்கைகளால் விரைவாக அடுத்தடுத்த கட்டமாக விசாரணை நடைபெற்று வந்தது. 


 

இந்த நிலையில்,  உச்சநீதிமன்றத்தின் தடையை நீக்கக்கோரி நக்கீரன்கோபால் உள்ளிட்ட 5 பேரும் தாக்கல் செய்த மனு 2019 டிசம்பர்-6  உச்சநீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் அப்துல் நசீர்  மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நக்கீரன் பத்திரிகையின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா மற்றும் துஷ்யந்த் தவே ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். 
 

தமிழக அரசின் தரப்பில் இந்திய அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் நக்கீரன்கோபால் உள்ளிட்ட 5 பேரும் தாக்கல் செய்து நிலுவையில் இருக்கும் வழக்கை நான்கு வாரங்களுக்குள் விசாரித்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

விவிபேட் வழக்கு; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Supreme Court verdict for case of Vvpad 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர். அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தன. மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். 

Supreme Court verdict for case of Vvpad 

இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்” எனத் தெரிவித்தனர். 

Supreme Court verdict for case of Vvpad 

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Supreme Court verdict for case of Vvpad 

இந்த வழக்கில் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், “தேர்தல் ஆனையம் கொடுத்த அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த ஆதரங்களையும், அதற்கான வாதங்களையும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். எனவே வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட முடியாது” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இரண்டு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஒரு முறையில்  சின்னம் பதிவு செய்யும் செயல்முறை முடிந்ததும், சின்னம் பதிவேற்றும் இயந்திரத்தை (SLU) சீல் வைக்க வேண்டும். வாக்குகள் எண்ணி முடித்த பின் அவை குறைந்தது 45 நாட்களுக்கு சேமிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.