Skip to main content

ஆஸ்திரேலியா பறக்கும்  ஹிட்மேன்!

Published on 07/12/2020 | Edited on 07/12/2020
rohit sharma

 

 

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ரோகித் சர்மா ஐ.பி.எல். தொடரின்போது காயமடைந்தார். அதன்பிறகு சில போட்டிகளில் விளையாடத ரோகித் சர்மா, ப்ளே-ஆப்ஸ் மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடினார்.

 

இருப்பினும் காயம் முழுமையாக குணமடையாததால் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஆனால், முழு உடல்தகுதியை விரைவில் எட்டினால், ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் ஆடுவார் என இந்திய அணி நிர்வாகம் அறிவித்தது.

 

இதனைத்தொடர்ந்து, ரோகித் சர்மா, முழு உடல்தகுதியினை எட்டுவதற்காகம் தேசிய கிரிக்கெட் அகடாமியில் பயிற்சி பெற்றுவருகிறார். இந்தநிலையில் அவர், வருங்காலத்தில் காயங்கள் மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவை ஏற்படாமல் இருக்க உடலை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.

 

மேலும், டிசம்பர் 11 ஆம் தேதி உடல்தகுதித் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அதில் தேர்ச்சி பெற்றுவிட்டால் அதற்கு மறுநாளே ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா புறப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.