"திருவாரூர் தொகுதிக்குள் ஆளே கிடைக்காத மாதிரி, நாகபட்டினத்திலிருந்து ஜீவாவை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்களே என்ற சலசலப்புச் சத்தம் அ.தி.மு.க.வில் பலமாக கேட்கிறது. “திருவாரூர் நகரச்செயலாளரா இருக்கும் ஆர்.டி.மூர்த்தி ரொம்ப வருஷமா சீட் கேட்டு போராடிக்கிட்டிருக்காரு. ஆனா அவருக்கு உடம்பு சரியில்லைன்னு சப்பைக் காரணத்தைச் சொல்லி ஆப்பு வச்சிட்டாரு அமைச்சர் காமராஜ். அதேபோல் கடந்தமுறை கலைஞரை எதிர்த்துப் போட்டியிட்ட பன்னீர்செல்வமும் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கிறார். இருந்தாலும் தி.மு.க. கோட்டை என்ற இமேஜை மாற்றுவதற்காக 200 கோடியை இறக்கப் போறாங்க ளாம்''’என்கிறார்கள் திருவாரூர் நகர ரத்தத்தின் ரத்தங்கள்.
"கலைஞரின் கோட்டை என்ற கணக்குடன் கோதாவில் குதித்திருக்கிறார் மா.செ. பூண்டி கலைவாணன். "கட்சிக்கும் கலைஞருக்கும் உள்ள செல்வாக்கு இவரது பலம். தனிப்பட்ட சிக்கல்களே பலவீனம்' என்கிறார்கள் உ.பி.க்கள். 20-ஆம் தேதி திருவாரூரில் பிரச்சாரத்தைத் தொடங்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், "எல்லாவற்ரையும் சரி செய்துவிட்டுப் புறப்பட்டால் தான் சரிப்பட்டுவரும்'' என்கிறார்கள்.
"தலைவனே!', "போராளியே!' என பூண்டி கலைவாணனுக்கு உ.பி.க்கள் வாழ்த்து மழை பொழிந்துகொண்டிருக்கிறார்கள். ஆளும் தரப்பிலோ, நகராட்சி அலுவலகத்திற்கு மக்களை வரவழைத்து, பேங்க் அக்கவுண்ட் நம்பரையும் செல்போன் நம்பரையும் வாங்கிக் கொண்டு கரன்சி மழைக்கு மேகமூட்டத்தை உருவாக்கு கிறார்கள். கலைஞரின் தொகுதியை தக்க வைக்க சகல அஸ்திரங்களையும் தி.மு.க. பயன்படுத்துமா?