Skip to main content

தே.மு.தி.க.வை பா.ம.க. பயன்படுத்திக்கொள்வதில்லை !

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

பன்முகத்தன்மை வாய்ந்த அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் ஆண் வேட்பாளர்களைக் காட்டிலும் 30 ஆயிரம் பெண் வேட்பாளர்கள் அதிகம் என்பது மட்டுமல்ல; 41 ஆயிரம் புது வாக்காளர்களும் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.

திருத்தணி, அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி என்று ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக் கியது இது. மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 74 ஆயிரத்து 133 பேர். வன்னியர் அதிகமுள்ள தொகுதி. அதற்கடுத்து பட்டியலினத்தவர்களும், முதலியார்களும், நாயுடுகளும் உள்ளனர். 1999-க்கு முன்புவரை எல்லாக் கட்சிகளும் முதலியார் சாதியிலிருந்தே வேட்பாளர்களை நிறுத்தின. அதற்குப் பிறகு பெரும்பாலும் வன்னியர் வேட்பாளர்களே நிறுத்தப் படுகிறார்கள். 

 

jegathratchagan



இந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகனை களமிறக்கியுள்ளது. கடந்த 2014 தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட வேலு 2 லட்சத்து 33 ஆயிரத்து 762 வாக்குகளையும், அ.தி.மு.க. வேட்பாளர் ஹரி 4 லட்சத்து 93 ஆயிரத்து 534 வாக்கு களையும் பெற்றனர். எனவே, சுலபமாக வெற்றி பெற்று விடலாம் எனக் கருதி இந்த தொகுதியை போராடி வாங்கியிருக்கிறது பா.ம.க. அந்தக் கட்சி சார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இரண்டு கட்சிகளும் வன்னியர்களை நிறுத்தியுள்ளதால் அ.ம.மு.க. சார்பில் முதலியார் சாதியைச் சேர்ந்த பார்த்திபன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் சோளிங்கர் தொகுதியின் தகுதிநீக்கம் செய்யப்பட்ட  உறுப்பினர் ஆவார்.

ஏற்கனவே இரண்டு முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால் ஜெகத்ரட்சகனுக்கு இந்தத் தொகுதி முழுவதும் அத்துப்படி. எனவே, வேட்பாளராக அறிவிக் கப்பட்டதும், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை முதல் சுற்று பார்த்துவிட்டார். அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்ததால் அதிருப்தியில் உள்ள பா.ம.க. இளைஞர்கள் மற்றும் கிராமங்களில் உள்ள பா.ம.க. தொண்டர்களை தி.மு.க.வுக்கு இழுக்கும் வேலையை தீவிரமாக்கி இருக்கிறார். இதையடுத்து, தினமும் 50 பேர் ஜெகத்தை சந்தித்து தி.மு.க.வில் தங்களை ஐக்கியப்படுத்தி வருகிறார்கள். இது, பா.ம.க.வின் மேல்மட்ட நிர்வாகிகளை மிரள வைத்துள்ளது. கடந்த மார்ச் 23-ந் தேதி இராணிப்பேட்டையில் ராமதாஸ் பிரச்சாரக் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க பா.ம.க.வினர் படாதபாடுபட்டனர். ஜெகத் தரப்பின் பொருளாதார ரீதியான சில வாக்குறுதிகளும், வேறு சில டீலிங்கும் பா.ம.க. நிர்வாகிகளை சைலண்ட் மோடுக்கு மாற்றியிருப்பதாக கூறுகிறார்கள். "6 சட்ட மன்றத் தொகுதிகளில் எந்த தொகுதி அதிக வாக்குகளை பெற்றுத் தருகிறதோ அந்த தொகுதிக்கு 1 கோடி பரிசு வழங்கப்படும்' என அறிவித்து கட்சி நிர்வாகிகளை ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார் ஜெகத்.

 

moorthy



"சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு நமக்கு பிரச்சனையில்லை, நம்மாளுங்க ஓட்டுப் போட்டுருவாங்க. காட்பாடி, அரக்கோணம், திருத்தணிதான் கொஞ்சம் சிக்கல். அதனால் அங்கு அதிகமா உழைக்கணும்' என பா.ம.க. நிர்வாகிகள் முடிவுசெய்து காட்பாடியில் வேட்பாளர் அறிமுகத்தின் முதல் கூட்டத்தை கூட்டி ஏ.கே.மூர்த்தியை அறிமுகம் செய்தார்கள். மார்ச் 22- ஆம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்த மூர்த்தியுடன் அ.தி.மு.க. முன்னாள் மா.செ. அப்பு, பா.ம.க. வேலு ஆகியோர் இருந்தார்கள். அ.தி.மு.க. கிழக்கு மா.செவும், அரக்கோணம் தனித்தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரவி இல்லை. இது அ.தி.மு.க.வில் உள்ள தலித் நிர்வாகிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரவியை பா.ம.க. ஒதுக்குகிறது என்றால் பா.ம.க.வை அ.தி.மு.க. ஒதுக்குகிறது. மார்ச் 22-ஆம் தேதி ஏ.கே.மூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது, அமைச்சர்கள் சம்பத், வீரமணி போன்றோர் நெமிலியில் இருந்தனர். "அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் வேட்புமனு தாக்கலுக்கு வரக்கூடாது என்பதால் நாங்கள் வரவில்லை' எனக்கூறி அப்புவை அனுப்பி வைத்தனர்.

இது பா.ம.க.வை கவலையடையச் செய்துள்ளது. தொகுதியில் நல்ல பெயர் எடுத்துள்ள ஏ.கே.மூர்த்தி, தனது  கட்சியினருக்கே தேர்தல் செலவுக்கு கிள்ளித்தருகிறார் என்கிறார்கள். தே.மு.தி.க.வை பெரும்பாலும் பா.ம.க. பயன்படுத்திக்கொள்வதில்லை என்பதால் அவர்களும் வேண்டா வெறுப்பாகவே உள்ளனர். 

அ.ம.மு.க. வேட்பாளரான பார்த்திபன், தொகுதியில் உள்ள 2.5 லட்சம் முதலியார் வாக்குகளை குறிவைத்து களமிறங்கியுள்ளார். தொகுதியில் அ.ம.மு.க.வுக்கான பலம் சோளிங்கர், இராணிப்பேட்டை தவிர வேறுஎங்கும் பெரியதாக இல்லை. அதிகமாக உழைக்க வியூகம் தீட்டியுள்ளார். "நம்ம சாதி ஓட்டை மாத்திப்போடாம எனக்கே போடணும்' என தங்களது சாதி அமைப்புகளிடம் பேசி வருகிறார். செலவுக்கு தினகரன் தந்தபிறகு, கட்சியினருக்குத் தரலாம் என்று இருக்கிறார். 
 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.