Skip to main content

மேகதாது அணையின் பின்னே மிகப்பெரிய சதி!

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
mekedatu

 

காவிரியின் குறுக்கே இனியொரு அணை கட்டக்கூடாது என்ற விதியை மீறி, மிகப்பெரிய அணையை மேகேதட்டு என்ற இடத்தில் கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

 

மத்திய அரசு அனுமதிக்கு முதல்நாள் ஒரு முக்கியமான சந்திப்பு நடந்திருக்கிறது. கர்நாடக அரசியலில் சண்டைக்கோழிகள் என்றும் இரு துருங்கள் என்றும் கூறப்படும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமாரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் சந்தித்து 1 மணிநேரம் பேசியிருக்கிறார்கள். அந்த ஊர் நாளிதழ்களில் இந்தச் செய்தி துருவங்கள் சந்தித்தன என்று வெளியானது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்தே மேகதாது அணை கட்ட மத்திய பாஜக அரசு ஒப்புதல் வழங்கியது என்று அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 

காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கிவிட வேண்டும் என்பதில் மத்திய பாஜக அரசு குறியாக இருக்கிறது. அம்பானி, அதானி, வேதாந்தா குழுமங்களின் வேட்டைக்காடாக டெல்டா மாவட்டங்களை மாற்றி, இந்த மாவட்ட மக்களை நிலமற்றவர்களாக்கி விரட்ட மறைமுகமாக சதி திட்டம் தீட்டப்படுகிறது என்று இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

 

காவிரி நீர் பங்கீடுக்கா காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு ஆடிய நாடகமே அதற்கு சாட்சியாக இருந்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் நடத்திய தொடர் போராட்டத்துக்கு எந்த ரியாக்‌ஷனும் கொடுக்காமல் காலந்தள்ளிய மோடி அரசு, எதிர்ப்பையும் மீறி வேதாந்தா குழுமத்திற்கு ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்க அனுமதி வழங்கியது.

 

இப்போது கஜா புயலால் கடலோர மாவட்டங்கள் தரைமட்டமாகியுள்ள நிலையில், அந்த மாவட்டங்களில் நிவாரணப் பணிகளும் மந்தகதியில் நடைக்கிறது. சிலை வைக்க 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தவர்கள், 6 மாவட்ட பேரழிவை சீரமைக்க 353 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறார்கள்.

 

இப்படிப்பட்ட நிலையில்தான் காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் வகையில் மேகதாது அணைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அங்கு பாஜக அரசு இல்லையென்றாலும், காங்கிரஸ், மஜத கூட்டணி அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ஆனால், தமிழகத்திலோ எதிர்க்கட்களும் ஆளுங்கட்சியும் எதிர்ப்பு உணர்வைக்கூட சிதறடிக்கின்றன. தமிழகம் ஒன்று திரண்டு போராடினால் மட்டுமே மேகதாது அணை அபாயத்தைத் தடுத்து, டெல்டா மாவட்ட விவசாயத்தை பாதுகாக்க முடியும்.

 

“கர்நாடகா பகுதியில் விளைநிலங்களின் பரப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், டெல்டா மாவட்டங்களில் முன்பு 25 லட்சம் ஏக்கராக இருந்த விளைநிலப் பரப்பு, இப்போது 15 லட்சம் ஏக்கராக சரிந்துள்ளது” என்கிறார் திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

 

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவில்லை என்பதால், கர்நாடகாவில் இருக்கிற ஆதரவை தக்கவைப்பதற்காக மத்திய மோடி அரசு மிகப்பெரிய சதித்திட்டத்தை தீட்டுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

 

 

 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.