ADVERTISEMENT

பா.ஜ.க -அ.தி.மு.க. கூட்டணி ! புலம்பும் சீனியர்கள்

12:29 PM Feb 18, 2019 | Anonymous (not verified)

பாம்பென்று அடிக்கவும் முடியவில்லை. கயிறு என்று தூக்கிப் போடவும் முடியவில்லை என பா.ஜ.க.வின் கூட்டணி விவகாரத்தில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது அ.தி.மு.க. என புலம்புகிறார்கள் கட்சியின் சீனியர்கள்.

பிப்ரவரி மாதம் 13-ம் தேதியன்று எடப்பாடி வீட்டில் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய எடப்பாடி, ""நாம் அறிவித்த 2,000 ரூபாய் திட்டம் தி.மு.க.வை கதிகலங்க வைத்துள்ளது. மாநில அரசு குடும்பத்திற்கு 2,000 ரூபாய் கொடுக்கிறது. மத்திய அரசும் முதல் கட்டமாக 2,000 ரூபாய் கொடுக்கிறது.

ADVERTISEMENT


இந்தத் தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல். இதில் நாம் பா.ஜ.க.வோடு சேர்வதால் மைனாரிட்டிகள் ஓட்டு போட மாட்டார்கள். அந்த ஓட்டு தி.மு.க.வுக்கு போனால் தி.மு.க. வெற்றி பெறும். ஆனால், அந்த ஓட்டுகளை டி.டி.வி. வாங்கி விடுவார். இப்படி மும்முனை போட்டி நிலவுவது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை எளிதில் வெற்றிபெற வைக்கும்'' என்று எடப்பாடி உற்சாகமாக பேசியிருந்தாலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அத்தனை சுலபமாக இறுதியாகவில்லை.

கூட்டணி தொடர்பாக மோடியின் குமரி விசிட்டும் தள்ளிப்போனது. முதலில் நிர்மலா சீதாராமன் அ.தி.மு.க.வுடன் பேசினார். அடுத்த கட்டமாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அ.தி. மு.க.வுடன் பேசி வந்தார். அ.தி.மு.க. 25, பா.ஜ.க. 8 என இறுதியாக பேசப்பட்டது. பா.ஜ.க.வின் 8-ல் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், வின் டி.வி. தேவநாதன் ஆகியோ ருக்கு சீட் கொடுத்தால் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம், தமிழிசை போன்ற "மந்திரி யோகம்' உள்ள பா.ஜ.க. பிரபலங்களுக்கு இடம் கொடுக்க முடியாது என்பதால் டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர் களை இரட்டை இலையில் போட்டி யிட வைக்கலாம் என பா.ஜ.க. யோசனை சொன்னது.

""அது முடியாது. நாங்கள் ஏற் கனவே சரத்குமாரை தூத்துக்குடியிலும், கொங்கு கட்சி ஒன்றை அந்த பெல்ட்டிலும் இரட்டை இலையில் நிற்க வைக்க முடிவு செய்துள்ளோம்'' என அ.தி.மு.க. பதில் சொல்லிவிட்டது.

அதேபோல் த.மா.கா.வின் ஜி.கே.வாசன் தஞ்சாவூர் தொகுதியை கேட்கிறார். முக்குலத்தோர் நிறைந்த அந்த தொகுதியில் வாசனுக்கு ஆதரவு குறைவு என அ.தி.மு.க. வேறு தொகுதி யைத் தர... அதை ஏற்க வாசன் தயங்குகிறார்.

"பா.ம.க.விற்கு எவ்வளவு சீட் தருகிறீர்களோ அதை எங்களுக்கும் கொடுங்க. மற்றவையும் வேண்டும்' என அமெரிக்காவிலிருந்து பிரேமலதா, பா.ஜ.க. தலைவர் தமிழிசையிடம் வலியுறுத்தியிருக்கிறார். விஜயகாந்த் சிகிச்சை முடிந்து சென்னை வந்ததும், அவர் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்கிறார்கள் அ.தி.மு.க. வினர் அதிர்ச்சியுடன். பா.ம.க.வும் மதில் மேல் பூனையாக நின்றுகொண்டி ருக்கிறது.

""தமிழக பா.ஜ.க. விவகாரங்களை கவனிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தங்கமணி, வேலுமணி கூட தனிப்பட்ட முறையில் பா.ஜ.க.வுடன் கூட்டணியை விரும்பவில்லை. "கூட்டணி சேரலைன்னா நம்மள அடிப்பாங்க. அதான் கூட்டணி' என கட்சித் தொண்டர்களிடம் பேசுகிறார்கள். ஓ.பி.எஸ்.தான் பா.ஜ.க. கூட்டணி விஷயத்தில் பச்சைக்கொடி அசைப்பவர். ஆனால் இவர்கள் அனைவரையும் தினகரனின் பா.ஜ.க. எதிர்ப்பு வேகம் கவலைகொள்ள வைத்துள்ளது.

""அதேபோல அ.தி.மு.க. சார்பில் எம்.பி. தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் தொண்டர்கள் மத்தியில் இல்லை. ஒவ்வொரு அமைச்சரும் தனது மாவட்டத்தில் உள்ள ஒன்றியச் செயலாளர்களை வலியுறுத்தியும்கூட முந்தைய தேர்தலுடன் ஒப்பிட்டால் 60% விண்ணப்பங்களே வந்தன. 21 தொகுதி இடைத்தேர்தலை பாராளுமன்றத் தேர்தலோடு நடத்தினால் மத்திய அரசு, மாநில அரசு மீதான இரட்டை அதிருப்தியை எப்படி சமாளிப்பது என்பதுதான் கூட்டணியை விட எடப்பாடியின் தூக்கத்தை கலைக்கும் விவகாரம்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

இந்நிலையில், பிப்ரவரி 14-ந் தேதி அமித்ஷாவும் அதன்பின்னர் பியூஷ்கோயலும் தமிழகம் வந்தது கூட்டணி நிலவரத்தை விறுவிறுப்பாக்கியது. 14ஆம் தேதி இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் வீட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பமானது. பியூஷ் கோயல் முன்னி லையில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் கலந்து கொண்டனர். பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தமிழிசையும் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க.வுக்கு 20 தொகுதி என பேச்சை ஆரம்பித்த பொன்.ராதா ""மீண்டும் மோடி தான் பிரதமர் ஆவார். தமிழகத்திலிருந்து நிறைய பேர் மத்திய அமைச்சர்களாக வர வேண்டியுள்ளது. உங்க ஆட்சியும் இரண்டு ஆண்டுகள் பிரச்சினை இல்லாமல் நடக்கும்'' என விளக்கமாகப் பேசியிருக்கிறார். மோடி ஆட்சி மீது அதிகரித்து வரும் அதிருப்தியை சுட்டிக்காட்டி, சிங்கிள் டிஜிட்டிலேயே நின்றி ருக்கிறார்கள் வேலுமணி யும் தங்க மணியும்.

டபுள் டிஜிட்டில் ஸ்ட்ராங்காக இருந்தது பா.ஜ.க.





ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT