Skip to main content

Funding Tamil

Support-Nakkheeran-Page- (1).jpg

அன்பான வாசகர்களே,

இதழ், இணையதளம், சமூக ஊடகங்கள் வழியாக தினம்தோறும் உங்களைச் சந்திப்பதிலும் உங்களுடன் பயணிப்பதிலும் மகிழ்ச்சி. உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக செய்திகள் வரை அனைத்தையும் உண்மைத் தன்மையுடன் உங்களிடம் கொண்டு சேர்ப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். 35 ஆண்டுகளாக பல்வேறு சமூக பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்களோடு துணைநிற்பதோடு இருளில் ஒளிந்துகொள்ளும் குற்றங்களையும் குற்றவாளிகளையும் உங்கள் முன் வெளிச்சம் போட்டுக் காட்டிவருகிறோம். அவற்றின் விளைவாக சிறை, வழக்குகள், தாக்குதல்கள், மிரட்டல்கள் என நக்கீரன் இன்றளவும் சந்தித்து வருகிற அடக்குமுறைகள் வார்த்தைகளால் விளக்க முடியாதவை.

மாவட்டந்தோறும் உள்ள நிருபர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேகரித்து அனுப்பும் செய்திகளும், அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் வாழ்வியல் தொடர்பான தகவல்களும் உங்களிடம் வந்து சேர புகைப்பட நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள், பல மூத்த பத்திரிகையாளர்கள், இளம் ஊடகவியலாளர் குழு, வடிவமைப்பாளர்கள், அச்சு இயந்திர பொறியாளர்கள், தொழிலாளர்கள், முகவர்கள், இணையதளம் மற்றும் செயலியில் சிறந்த வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது அயராத உழைப்பைக் கொடுத்துவருகின்றனர். இவர்களுடன் சேர்த்து வாசகர்களாகிய நீங்களும் அடங்கியதே நக்கீரன் குடும்பம், எங்கள் சாதனைகள் உங்களையும் சாரும்.

அன்றாடம் வாசகர்களுக்கு உண்மையான செய்திகளையும் சுவாரசியமான தகவல்களையும் வழங்குவது மனநிறைவும் மகிழ்ச்சியும் அளிப்பதாக இருப்பினும் பெரும் சவால்களும்  நிறைந்ததாக இருக்கின்றது. கொரோனா உள்ளிட்ட பேரிடர்களும், டிஜிட்டல் யுகத்தில் நிலவிவரும் நிலையற்ற தன்மையும் ஊடகங்களுக்கு மிகப் பெரிய பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

அன்றாடம் வாசகர்களுக்கு உண்மையான செய்திகளையும் சுவாரசியமான தகவல்களையும் வழங்குவது மனநிறைவும் மகிழ்ச்சியும் அளிப்பதாக இருப்பினும் பெரும் சவால்களும்  நிறைந்ததாக இருக்கின்றது. கொரோனா உள்ளிட்ட பேரிடர்களும், டிஜிட்டல் யுகத்தில் நிலவிவரும் நிலையற்ற தன்மையும் ஊடகங்களுக்கு மிகப் பெரிய பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

நன்றி!