ADVERTISEMENT

விஜய்யின் ரஞ்சிதம் பாடலுக்கு கையில் சூடம் ஏற்றி வழிபாடு; ரசிகர் அட்ராசிட்டி

03:23 PM Nov 04, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பீஸ்ட்' படத்திற்கு பிறகு, விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங், கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில், விஜயின் வாரிசு திரைப்படம், பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அஜித் நடிக்கும் ‘துணிவு' படமும் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

முதலில், வாரிசு படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என கூறிவந்த நிலையில், அந்த பாடல் தீபாவளிக்கு வெளியாகவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனையடுத்து, நேற்று மாலை ‘வாரிசு’ படத்தின் முதல் பாடலின் ப்ரொமோ வீடியோ, படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் பாடிய ‘ரஞ்சிதமே’ எனத் தொடங்கும் இப்பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுதி இருக்கிறார். மேலும், இத்திரைப்படத்தின் முதல் பாடல், நாளை(5.11.2022) தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு, வாரிசு படத்தின் அப்டேட் வெளியானதால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர். நேற்று, படத்தின் ப்ரொமோ வெளியான நிலையில் மதுரை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர், ரஞ்சிதமே பாடலை வித்தியாசமாக கொண்டாடி உள்ளார். அதில், தன் கையில் சூடம் ஏற்றி டிவி முன்பு விஜயின் பெயர் மற்றும் விஜய்யின் நடனமாடும் காட்சி வரும்போது போது தெய்வத்தை வழிபடுவது போல் வழிபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜயின் பாடலுக்கு சூடம் ஏற்றும் அந்த ரசிகரின் பெயர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT