கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குபின் சினிமா பிரபலங்கள் பலரும் உதவி செய்து வரும் நிலையில், தற்போது கரோனா நிவாரண பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், தமிழக முதல்வர் நிவரண நிதிக்கு ரூ.50 லட்சமும், கேரளா முதல்வர் நிவரண நிதிக்கு ரூ.10 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி முதல்வர் நிவரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் வேலையில்லாமல் கஷ்டப்படும் ஃபெப்சியின் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இது தவிர, பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நேரடியாக உதவுவதற்காக ரசிகர் மன்றங்களுக்கு கணிசமான ஒரு தொகையையும் நிதியுதவியாக அளித்துள்ளார்.
Show comments