ADVERTISEMENT

"என் யோசனைகளை நிறைவேற்ற முழு சுதந்திரம் அளித்தார்" - விஜய் ஆண்டனி உருக்கம்!

12:45 PM Sep 17, 2020 | santhosh

ADVERTISEMENT

விஜய்-அனுஷ்கா நடித்த 'வேட்டைக்காரன்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாபு சிவன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற நாடகத்தையும் இயக்கியுள்ளார். மேலும் தரணி இயக்கிய 'குருவி', பரதன் இயக்கிய பைரவா படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் இருந்த இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திடீரென்று காலமானார். அவருக்கு வயது 55 ஆகும். இவரின் இந்த திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகரும், வேட்டைக்காரன் பட இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...

ADVERTISEMENT

"வேட்டைக்காரன் இயக்குனர் பாபு சிவனின் திடீர் மறைவு குறித்து நான் மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். வேட்டைக்காரன் திரைப்படத்தில் எனது யோசனைகளை நிறைவேற்ற எனக்கு முழு சுதந்திரம் அளித்த அவர் மிகவும் எளிமையான மனிதர். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT