ADVERTISEMENT

"பெருமைமிகு வாய்ப்பை வழங்கிய கமல் சாருக்கு நன்றி" - உதயநிதி ஸ்டாலின்

12:41 PM Jul 26, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, சினிமா விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றது.

இதையடுத்து தடம், மீகாமன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்து அடுத்த கட்ட பணியில் உள்ளது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அடுத்தாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று (25.7.2022) நடைபெற்ற ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழாவில் கமல்ஹாசன் வெளியிட்டார். ஆனால் படம் தொடர்பான மற்ற அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.

இது குறித்து உதயநிதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “15 வருட ரெட் ஜெயிண்ட் -ன் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். ராஜ்கமல் ப்லிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT