இந்த படத்தின் பாடல்கள் ஆந்திரா மக்களிடையே மட்டும் நல்ல வரவேற்பை பெறாமல் தமிழக மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்து தமிழில் வெளியாக இருக்கிறது. கே.ஈ. ஞானவேல்ராஜா இந்த படத்தை தமிழில் வெளியிடுகிறார்.
இதுகுறித்து தெரிவித்துள்ளது,‘‘ரங்கஸ்தலம் படம் தயாரிப்பில் இருந்தபோதே அதன் ஒவ்வொரு நிலைகளையும் கவனித்து வந்திருக்கிறேன். அதன் வெளியீட்டுக்கு முன்பே முக்கியமான சில சிறப்பு அம்சங்களை என்னால் உணர முடிந்தது. படத்தை பார்த்தபோது, ரங்கஸ்தலம் என்ற இடத்துக்கே நான் போய்வந்தது போல் உணர்ந்தேன். கதை சொன்ன விதம் மிக சிறப்பாக இருந்தது.
குடும்பத்துடன் படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் முழுமையான திருப்தியை தரும். எனவே கோடை விடுமுறை விருந்தாக, ‘ரங்கஸ்தலம்’ படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.’’என்றார்.