Skip to main content

எஸ்.டி.ஆர் & கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் கன்னட ரீமேக்...

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

நடிகர் சிம்பு வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தைத் தொடர்ந்து வெகட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்காக இங்கிலாந்து நாட்டில் தங்கி உடலைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். சிம்பு வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

str

 

 

இந்த நிலையில், சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு குறித்து வெளியிட்டுள்ளது ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம்.
 

‘மஃப்டி’ என்னும் கன்னட படத்தின் தமிழ் ரீமேக் இது. கன்னடத்தில் ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக்கும், சிவராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கிறார்.
 

கன்னடத்தில் மஃப்டி படத்தை இயக்கிய நார்தன்தான் தமிழிலும் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தேர்வு நடைபெற்று வருகிறது. இரத்தம் தெறிக்க வன்முறைக் காட்சிகள் பல கன்னட படத்தில் இருக்கும், அதை மட்டும் தமிழில் கொஞ்சம் குறைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
 

மேலும் இந்த படம் குறித்த பல தகவல்களை விரைவில் அறிவிக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது தற்கொலைக்கு தூண்டியதாக புகார்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Complaint against producer Gnanavel Raja for jewells stolen issue

சென்னை தி.நகர் பகுதியில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம் தனது வீட்டில் தங்கப் பரிசுப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஞானவேல் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் வீட்டுப் பணிப்பெண் லட்சுமி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் லட்சுமியிடம் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, நகைகளைத் திருடவில்லை எனப் பணிப்பெண் சொன்னதாக கூறப்படும் நிலையில் மீண்டும் விசாரணைக்கு இன்று வருமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து காவல்துறையின் அடுத்தடுத்த விசாரணை காரணமாக லட்சுமி மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் லட்சுமி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதைக் கண்ட லட்சுமியின் குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகைச்சைப் பிரிவில் சிகைச்சை நடந்து வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே பணிப்பெண் லட்சுமியின் மகள் மாம்பலம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் மீதும், தனது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் கொடுத்துள்ளார்.

Next Story

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் தற்கொலை முயற்சி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Producer Gnanavel Raja Housemaid incident

ஸ்டூடியோ கிரீன் என்ற பேனரில் திரைப் படங்களைத் தயாரித்து வரும் ஞானவேல் ராஜா, தற்போது சூர்யாவின் கங்குவா, விக்ரமின் தங்கலான், கார்த்தியின் வா வாத்தியாரே உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருகிறார். 

இதனிடையே கடந்த மாதம் தனது வீட்டில் தங்கப் பரிசுப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஞானவேல் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் வீட்டுப் பணிப்பெண் லட்சுமி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் லட்சுமியிடம் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, நகைகளைத் திருடவில்லை எனப் பணிப்பெண் சொன்னதாகவும், விசாரணைக்கு இன்று வருமாறு போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் காவல்துறையின் அடுத்தடுத்த விசாரணை காரணமாக லட்சுமி மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து லட்சுமியின் குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு லட்சுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.