Skip to main content

விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு...

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

அட்லி, விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் பிகில். இந்த படம் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

sr prabhu

 

 

சுமார் ரூ.150 கோடிக்கு மேல் செலவு செய்து இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தொடக்கத்தில் இந்த படம் மட்டும்தான் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், எந்த தேதியில் ரிலீஸ் என்பதை அறிவிக்கவில்லை. 

இந்நிலையில் எஸ்.ஆர்.பிரபு சார்பில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள கைதி படமும் அக்டோபர் 25ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. முதலில் கைதி படத்தின் ரிலீஸ் தேதிதான் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இரண்டு படங்களுக்கு ரிலீஸுக்கு தயாரகி, முன்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் பிகில் மற்றும் கைதி குறித்து ட்வீட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த எஸ்.ஆர்.பிரபு இரண்டு படங்களுமே தீபாவளிக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்றார்.

கைதி பட தயாரிப்பாளரின் இந்த பதிவைப் பார்த்த விஜய் ரசிகர் ஒருவர், நீங்கள் ஏன் விஜய்யை வெறுக்கிறீர்கள். உங்களது தயாரிப்பில் வெளியாகும் படங்களைப் பார்க்கிறேன். ஏன் விஜய் பெயரை டேமேஜ் செய்கிறீர்கள் என்றார். மேலும் ஒரு விஜய் ரசிகர் கைதி படக்குழு செய்வது சரியில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளித்த கைதி பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ரசிகர்கள் சண்டை போடுவதற்காக விமர்சிப்பதற்கான வாய்ப்புகளை அவர்களே தேடிக்கொள்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவ முடியாது. எல்லா படங்களும் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் வெற்றிபெற வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். முகமில்லாத முட்டாள்தனமான குணாதிசயங்களுடன், அசிங்கமான பதிவுகளின் மூலம் மாற்றத்தை கொண்டுவரலாம் என்று நினைப்பவர்களுக்கு நான் எதுவும் சொல்வதற்கில்லை” என்று கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.