ADVERTISEMENT

நீச்சல் குளப் புகைப்படத்தை நீக்கிவிட்டு விளக்கமளித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்...

01:22 PM Jul 01, 2019 | santhoshkumar

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா சமீபத்தில்தான் விஷாகன் என்ற நடிகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர் தன்னுடைய சுற்றுலா படங்களை ட்ராவல் டைரி என்ற தலைப்பில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவ்வரிசையில் தன் மகன் வேத் உடன் நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி கொடுக்கும் புகைப்படத்தை நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளத்தில் கடும் விமர்சனம் எழுந்தன. தமிழகமே தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் பிரச்சனை ஆபத்தான நிலையில் இருக்கிறது இந்த சமயத்தில் நீச்சல் குளத்தில் குளிப்பதுபோல புகைப்படம் தேவைதானா. இவ்வளவு தண்ணீரை வீணடிக்கிறீர்களே என்று பலரும் விரக்தியில் அவருக்கு கமெண்ட் செய்து வந்தனர்.

பின்னர், மக்களின் கருத்துக்களை உணர்ந்த சவுந்தர்யா அந்த படத்தை உடனடியாக ட்விட்டரிலிருந்து டெலிட் செய்தார். அதனை அடுத்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், “தண்ணீர் பற்றாக்குறையால் என்னை சுற்றிலும் உள்ளவர்கள் அவதிப்படும் நேரத்தில் அந்த படம் வேண்டாம் என்று நீக்கி விட்டேன். மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதால் அவனுக்கு அளிக்கும் பயிற்சியை பகிரும் நோக்கத்தில் தான் அந்த படத்தை வெளியிட்டேன்”. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT