ADVERTISEMENT

''ஒவ்வொரு ஆண்மகனும் பார்க்க வேண்டிய படம் இது'' - சமுத்திரக்கனி  

10:29 AM May 29, 2020 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'.


2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குனர் ஜே.ஜே.ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் (இன்று) மே 29- ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வரும் நிலையில் நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனி 'பொன்மகள் வந்தாள்' படத்தைப் பாராட்டி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

''பொன்மகள் வந்தாள், ஒவ்வொரு ஆண்மகனும் பார்க்க வேண்டிய திரைப்படம். பெண்மை காப்போம். கிரியேட்டிவ் டீம் & ஜோதிகா மேடம்... வாழ்த்துகள்!'' எனக் கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT