Skip to main content

''நீங்கள் நிச்சயமாக எங்களைப் பெருமைப்படுத்துவீர்கள் என்று எனக்குத் தெரியும்'' - அதுல்யா ரவி

Published on 30/05/2020 | Edited on 30/05/2020
bdxzb


ஜோதிகா நாயகியாக நடித்து, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'.


2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குனர் ஜே.ஜே. ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் (நேற்று) மே 29- ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வரும் நிலையில் நடிகை அதுல்யா ரவி 'பொன்மகள் வந்தாள்' படத்தைப் பாராட்டி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

''அமேசானில் பொன்மகள் வந்தாள் படம் பார்த்தேன். ஃபிரெட்ரிக், இதுபோன்ற உணர்ச்சிகரமான மற்றும் வலுவான செய்தியை எங்களுக்கு வழங்குவதன் மூலம் நீங்கள் நிச்சயமாக எங்களைப் பெருமைப்படுத்துவீர்கள் என்று எனக்குத் தெரியும். ஜோதிகா, சூர்யா, பாக்யராஜ், பார்த்திபன் ஆகியோருக்குப் பெரிய வணக்கமும் மரியாதையும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நீ இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்' - ஏக்கத்தில் ஜெய்

Published on 03/08/2022 | Edited on 03/08/2022

 

jai athulya ravi in Yenni Thuniga movie video song released

 

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் ஜெய் 'பட்டாம்பூச்சி' படத்தை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி இயக்கும் ''காஃபி வித் காதல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'எண்ணித்துணிக' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி நாயர் உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். வெற்றிச்செல்வன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானது. 

 

இந்நிலையில் 'எண்ணித்துணிக' படத்தின் 'என்னடி பெண்ணே' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. கதாநாயகி அதுல்யாவை காதலிக்கும் ஜெய், அதுல்யாவை எப்படி காதலிக்கிறார் என்பதை விவரிக்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. மேலும் காதலர்களிடம் நல்ல வரவேற்பையும் இப்பாடல் பெற்று வருகிறது. இப்படம் நாளை (04.08.2022) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

“நடிகருடன் கார் பயணம்; ரோட்டுக்கடை உணவு” - அனுபவத்தை பகிர்ந்த ஆண்ட்ரியா

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

andrea jeremiah talk about vattam movie

 

மாயோன் படத்தை தொடர்ந்து சிபிராஜ் ரேஞ்சர் மற்றும் வட்டம் ஆகிய இரு படங்களிலும் நடிக்கிறார். இதில் வட்டம் படத்தை கமலக்கண்ணன் இயக்க, ஆண்ட்ரியா, அதுல்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ள இப்படம் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.  இப்படம் வரும் 29 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

 

இதனையொட்டி இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சிபிராஜ், "வட்டம் எனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைந்தது, எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்து கதையை மையப்படுத்தி படம் எடுத்து வருகிறார்கள். இந்த கதையை நான் கேட்கும் போது, நான் செய்து கொண்டு இருந்த படங்களிலிருந்து மாறுபட்டு, இந்த கதை ஒரு வித்தியாசமான உணர்வை கொடுத்தது. இயக்குநர் கமலகண்ணன் மற்றும் கவிநயம் இந்த படத்தை எழுதியுள்ளனர். படத்தின் திரைக்கதை சிறப்பாக இருந்தது.  இயக்குநர் கமலக்கண்ணன், மிக சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். இது எனது முதல் ஓடிடி படம், முதல் படமே டிஸ்னி போன்ற பெரிய தளத்தில் அமைந்தது மகிழ்ச்சி. நான் ஆண்ட்ரியா உடைய மிகப்பெரிய ரசிகன், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஜூலை 29 இந்த படம் வருகிறது. படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இவரை தொடர்ந்து பேசிய ஆண்ட்ரியா, "ட்ரீம் வாரியர் என்ற பெரிய நிறுவனம் தான் இந்த படத்தை இவ்வளவு நாள் தாங்கி பிடித்து இருந்தது. நிவாஸ் உடைய பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. சிபி ஒரு கூலான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் இரவில் காரில் ஷூட்டிங்கில் சுற்றி ரோட்டுக் கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கமலக்கண்ணன் படத்தை மிக தெளிவாக எடுத்துள்ளார்" என்றார்.