இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மேலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ள நிலையில் ஹிந்தி நடிகரான ரிஷி கபூர் மாலையில் சிறிது நேரம் மதுக்கடைகளைத் திறப்பது குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...''அரசு மாலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மதுபான கடைகளை சிறிது நேரம் திறந்து வைக்கலாம். இதற்காக என்னை தவறாக நினைக்க வேண்டாம். வீட்டில் இருக்கும் மனிதனுக்கு மனச்சோர்வு இருக்கும். போலீசார், மருத்துவர்கள், பொதுமக்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. அதேபோல் மாநில அரசு கலாலுக்கும், வருவாய்த் தீவீரமாகத் தேவைப்படுகிறது. மனசோர்வில் விரக்தி கண்டிப்பாகச் சேர்ந்துவிடக்கூடாது. இது என் கருத்து'' எனப் பதிவிட்டு அரசாங்கத்திற்கு யோசனை தெரிவித்துள்ளார்.