Skip to main content

காந்தி ஜெயந்தி போல் காந்தி நினைவுதினத்திலும் மதுக்கடைகளை மூட உத்தரவு

Published on 29/01/2019 | Edited on 29/01/2019
b


காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2ம் தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காந்தி நினைவு தினமான நாளை ஜனவரி 30ம் தேதியும் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  

 

விளவங்கோட்டில் விதிகளை மீறி இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் குறித்து கன்னியாகுமரியை சேர்ந்த ரத்தீஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்,  தொடர்ந்த வழக்கின் விசாரணையின் போது,  காந்தி நினைவு தினத்திலும் மதுக்கடைகளை மூடப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.   மனு மீதான விசாரணைக்குப்பின்னர்  நாளை( 30, டிசம்பர்) தமிழகம் முழுவதிலும் டாஸ்மாக் கடைகளை மூத உத்தரவிட்டதோடு, மதுக்கடைகளை மூடியது தொடரபாக பிப்ரவரி 18ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்