உலகமெங்கிலும் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு 'காலா' ஜுரம் தொற்றிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் சத்தமே இல்லாமல் ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் இன்று துவங்கியிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்க்கத்தில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் விஜய் சேதுபதி முதல்முறையாக ரஜினியுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சிம்ரன், மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா, சனத் ரெட்டி ஆகியோரும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தை பொங்கலன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது ரஜினி ரசிகர்களுக்கு இன்று டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments