'காலா' படத்தையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டார்ஜிலிங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அங்கு தொடர்ந்து ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்கவிருப்பதால் அங்குள்ள அலீட்டா ஹோட்டல் & ரிசார்ட்டில் 10 நாட்களாக ரஜினி தங்கியிருக்கிறார். இதனையடுத்து ரஜினி மேல் கொண்ட அன்பின் காரணமாக அந்த ரிசார்ட்டில் ரஜினிகாந்த் தங்கிய பகுதிக்கு ஹோட்டல் உரிமையாளர் ‘ரஜினிகாந்த் வில்லா #3′ என பெயரிட்டுள்ளார். மேலும் அங்கு வழங்கப்பட்ட டீ ரஜினிக்கு மிகவும் பிடித்திருந்ததால் அதற்கும் 'தலைவா ஸ்பெஷல் டீ' ' என பெயரிட்டுள்ளார். ரஜினியைப் பார்க்க அங்கும் ரசிகர்கள் கூடுகின்றனர்.