ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்காக டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். மேலும் அங்கேயே தங்கி 30 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் வசனம், காட்சி எதிலும் அரசியல் வேண்டாம் என்று ரஜினி ஆரம்பத்திலேயே கூறியதாக தற்போது புதிய தகவல் ஒன்று உலா வந்துகொண்டிருக்கிறது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேலும் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்கு முன்னரே முழு கதையை படிக்கும்போது அரசியல் சார்ந்தவைகள் இல்லாமல் பார்த்துக்கொண்டதாகவும், மேலும் காலா படத்தில் பேசப்பட்ட அரசியல் என்பது அவருக்கு மைனசாக அமைந்தது என்கிற கருத்துக்கள் பரவலாக உள்ள காரணத்தால் இனி வரும் காலங்களில் சர்ச்சைகளை தவிர்க்க தான் நடிக்கும் படங்களில் அரசியல் இல்லாமல் பார்த்துக்கொள்வது என்று ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக தற்போது புதிய தகவல்கள் உலா வர ஆரம்பித்துள்ளன. மேலும் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாததால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த குழப்பம் நிலவி வருகிறது.