ADVERTISEMENT

"25 ஆண்டுகளுக்கு பிறகு அவருடன் மீண்டும் இணையவுள்ளேன்" - மேடையிலேயே அறிவித்த தயாரிப்பாளர் தாணு!

06:26 PM Dec 04, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான மரைக்காயர் திரைப்படம் கடந்த 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இயக்குநர் ப்ரியதர்ஷன், கலைப்புலி தாணு உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலைப்புலி தாணு பேசுகையில், "இயக்குநராக ஒரு இமாலயத்தை தொட்டு அதற்கு மேலாக உயர்ந்து கொண்டிருப்பவர் இயக்குநர் ப்ரியதர்ஷன். 25 ஆண்டுகளுக்கு முன்பு சிறைச்சாலை என்ற படத்தை என்னுடைய தயாரிப்பில் ப்ரியதர்ஷன் சார் இயக்கினார். பட்டிதொட்டியெங்கும் அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அப்படிப்பட்ட இயக்குநர் மரைக்காயர் படத்தை நான்தான் வெளியிட வேண்டும் என்று அவருடைய தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார். அவர் படத்தை நான்தான் பண்ணுவேன். என்னுடைய படத்தை அவர்தான் பண்ணுவார் என்று தயாரிப்பாளர் ப்ரியதர்ஷனிடம் கூறியுள்ளார்.

அதற்காக இந்தப் படத்தினை பார்த்தேன். ஆங்கில படங்களைவிட சிறப்பாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள். இயக்குநர் ப்ரியதர்ஷன் நவீன சிற்பி. அவர் இந்திய சினிமாவிற்கு கிடைத்த மாமணி. அவர் யாருக்கெல்லாம் யாருக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கிறாரோ அவர்கள் மிக உயர்ந்த இடத்திற்கு செல்கிறார்கள். ஹாலிவுட் படங்களுக்கு இணையான சி.ஜி. வேலைகளை முதல் படத்திலேயே சித்தார்த் ப்ரியதர்ஷனுக்கு கொடுத்து, அவருக்கு தேசிய விருது பெற்றுக்கொடுத்தார். இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பேரானந்தம் கொள்கிறேன். படத்தில் ஒளிப்பதிவு, கலை இயக்கம், பாடல்கள், வசனம் சிறப்பாக உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு அவருடன் மீண்டும் நான் இணைவதற்கான வாய்ப்பு விரைவில் வரும். அதை அவரே அதிகாரப்பூர்வமாக கூறுவார். தமிழில் நான் படம் பண்ணினால் தாணுவிற்குதான் பண்ணுவேன் என்ற பிடிவாதத்தில் இருக்கிறார். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்" எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT