கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு, ஃபெப்சியின் வேண்டுகோளுக்கு பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் தற்போது பசங்க, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை பட இயக்குனர் பாண்டிராஜ் வேலையின்றி கஷ்டப்படும் ஃபெப்சி தொழிலார்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். அதேபோல் ஓய்வின்றி உழைத்துவரும் காவல் துறையினருக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் அவ்வப்போது திரைத்துறையினர் உதவி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Show comments