இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில்நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடல் குறித்தஅறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி" எதற்கும் துணிந்தவன்' படத்தின் முதல் பாடல் நாளை (15.12.2021) மாலை 6 மணிக்கு வெளியாகும் எனகுறிப்பிட்டு பாடலின் சிறு ப்ரொமோ வீடியோவை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#ETFirstSingle is ready to hit you Tomorrow at 6pm!
An @immancomposer musical | Sung by @gvprakash & @anirudhofficial | Lyrics: @VigneshShivN@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @RathnaveluDop @priyankaamohan @sooriofficial @AntonyLRuben @VijaytvpugazhO #EtharkkumThunindhavan pic.twitter.com/ut0ye7zrf4
— Sun Pictures (@sunpictures) December 14, 2021