ADVERTISEMENT

அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் அடுத்த படம்?

06:50 PM Jun 18, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

'அவள்' படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கத்தில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் 'நெற்றிக்கண்'. ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்தில் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்துள்ளார்.

முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா முதல் அலை காரணமாக தடைபட்டது. பின், நிலைமை சீரானதும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்தது. இப்படத்தின் இறுதி வடிவத்தை நடிகை நயன்தாரா சமீபத்தில் பார்த்ததாகவும், அவருக்கு படம் மிகவும் பிடித்திருந்ததால் இயக்குநர் மிலிந்த் ராவிற்கு பாராட்டு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

தற்போது கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால், நெற்றிக்கண் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் முடிவெடுத்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ரிலீஸிற்காக முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்றிடம் நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தையில் இறுதிமுடிவு எட்டப்பட்டுவிட்டதாகவும் அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT