ADVERTISEMENT

பல வருடங்கள் கழித்து மீண்டும் உருவாகும் முந்தானை முடிச்சு!!!

02:53 PM Sep 19, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

கடந்த 1983ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்து பெரும் வரவேற்பை பெற்ற படம் முந்தானை முடிச்சு. இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது.

ADVERTISEMENT

தமிழில் மாபெரும் ஹிட் அடித்ததை தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. ஊர்வசி, பூர்ணிமா பாக்யரஜ், உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 37 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கின்றார். மேலும், ஜே.எஸ்.பி. சதீஷ் இந்த படத்தை தயாரிக்கின்றார். அடுத்த வருடம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT