Skip to main content

'மூளை இல்லாத ஒரு ஆள் இந்த படத்தை எடுக்க முடியாது' - ஆரி

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

'A man without a brain cannot take this movie' - Actor Aari

 

இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில் கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘3.6.9’. இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பி ஜி எஸ் தயாரித்து நடித்துள்ளார். கார்த்திக் ஹர்ஷா இசையமைத்துள்ளார். ஒரே நேரத்தில் 24 கேமராக்களை கொண்டு சுமார் 450 தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த திரைப்படத்தை 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக படமாக்கி படக்குழு மாபெரும் சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆரி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 

 


இவ்விழாவில் பேசிய  நடிகர் ஆரி, "தனிப்பட்ட முறையில் எனக்கும், இந்த படத்திற்கும் தொடர்பு இருக்கு. 3.6.9 என்னுடைய கார் நம்பர்.  என் காருக்கு இந்த நம்பர் எடுத்த போது இதன் விளக்கம் எனக்கு தெரியாது. அதன் பிறகு நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இயக்குநர் ஆனந்த் எப்பவுமே அவரு வேலை செய்யும் படங்களுக்கு வந்துருங்கனு மட்டும் சொல்லுவார். மத்தபடி எந்த தகவலும் சொல்ல மாட்டார். அவரிடம் தொந்தரவு பண்ணி கேட்ட போதுதான் நான் தயாரித்து இருக்கிறேன் வந்துருங்கன்னு சொன்னார். 'என்னய்யா இவ்ளோ நாள் என்னை வச்சி படம் எடுக்காம சத்தமே இல்லாம இரண்டு படம் தயாரிச்சிருக்கன்னு திருப்பி கேட்டேன். நம்ம நண்பர்கள் சேர்ந்து பண்ணினார்கள் நாம உதவி பண்ணிருக்கோம் வாங்கன்னு சொன்னார். அப்புறம் என்ன கதை, ட்ரைலர்-லாம் போடுவீங்களா எதையும் பாக்காம எதை பத்தி பேசுறது என்று திருப்பி நான் தொந்தரவு பண்ணி கேட்டேன். அப்புறம் முன்னோட்டம் மாறி ஒரு டீசர் போடுவோம் என்று சொன்னார்'. பின்பு டீசர் போட்டுக் காண்பித்தார்கள். மூன்று முறை போட்டுக் காண்பித்தார்கள். அப்போதே தெரிந்து விட்டது, இந்த முன்னோட்டத்துக்கு பின்னாடி பெரிய வெள்ளோட்டம் இருக்கு. நிறைய விஷயங்களை வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதில் இயக்குநர் தெளிவாக இருக்கிறார் என்று புரிந்தது.

 

இப்படத்தை பற்றி பேச வேண்டியது இருக்கும் போது, படத்தை பற்றி ஒரு முழு விவரங்களோடு பத்திரிக்கை செய்தி குறிப்பு அனுப்பினார். நான் ஏன் வரணும் என்று திருப்பி கேட்டபோது, நீங்க ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளீர்கள் இந்த படமும்  கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அது தொடர்பாக நீங்கள் சம்மந்தப்பட்டுள்ளீர்கள் அதற்காகவும் நீங்கள் வரலாம் என்று பேசினார். இயக்குநர் பேசுகையில் நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தீர்கள் என்றால் கதையை பற்றி அதிகம் சொல்லவில்லை. 'திருத்துவதற்கு கதை வரவில்லை சிந்திக்கிற மாதிரி கதை வச்சிருக்கேன்' என்று சுருக்கமாக தன் உரையை முடித்து கொண்டார்.

 

'தல இருக்கும் போது வால் ஆட கூடாது' அதனால் அப்பா நிறைய பேசுவார். படக்குழு அனைவரும் அழகாக சுருக்கமாக பேசி முடித்துவிட்டனர். இயக்குநர் அளவாக பேசணும் என்று பயிற்சி கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் பேசிய அனைவரும் தங்களது அப்பா, அம்மாவை நினைவு கூர்ந்து தன் உழைப்பால் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம் என நேர்த்தியாக இங்கு பதிவிட்டார்கள். சினிமா திட்டுபவனையும் வாழ்த்தும் பாராட்டுபவனையும் வாழ வைக்கும். இன்றைக்கு ஒரு படத்தை விமர்சித்து யூ ட்யூபில் பதிவிட்டு அதன் மூலம் சம்பாதிப்பவர்கள் அனைவரும் சினிமாவை வைத்து தான் வியாபாரம் செய்து சம்பாதிக்கிறார்கள். அந்த வகையில் சினிமா எப்போதுமே 'வாழவைக்கிறவனையும் வாழ விடும் வாழ கெடுக்கிறவனையும் வாழ வைக்கும்' அது தான் சினிமாவை நம்பி இருக்கிற ஒரு பெரிய தொழிலுக்கான மரியாதை.

 

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் இவ்ளோ வசூலித்தது என்று பேசுகிறோம். ஆனால் எங்கோ ஒரு தெருக்கோடியில் இருந்து தனக்கான ஒரு மேடையை அமைத்துக்கிட்டு ஒரு சில கோடிகளில் பல கோடி மக்களுக்கு தன்னை அடையாளப்படுத்தனும் என்று ஒரு பெரும் முயற்சியோடு பணியாற்றி உள்ளார்கள். 21 வருடத்திற்கு பிறகு பாக்யராஜ் சார் கதாநாயகனாக நடிக்கிறார் என்று சொன்னார்கள். கதாநாயகனாக அவர் திரும்ப வந்திருக்கலாம். ஆனால் கதைக்கும் திரைக்கதைக்கும் என்றைக்கும் ஒரே நாயகன் தமிழ் சினிமாவில் அவர் மட்டும் தான். இன்னொரு 21 ஆண்டுகள் கழித்தும் எல்லாருக்கும் அவர் தான் முன்னோடியாக இருப்பார். இன்றைக்கு என்னிடம் வந்து ஒரு அடல்ட் காமெடி படம் பண்ணுவீர்களா என்று கேட்டார்கள். பாக்யராஜ் சார் படம் மாதிரி பண்ணுவீங்கன்னா சொல்லுங்க தாராளமா நம்பி உங்களோடு வருகிறேன் என்று சொன்னேன். ஒரு அடல்ட் காமெடி படத்தை நேர்த்தியாக குடும்பங்கள் விரசம் இல்லாமல் பார்த்து ரசிக்கிற அளவிற்கு ஒரு படம் கொடுத்த இயக்குநர் தான் பாக்யராஜ். அந்த ஜானரில் அதிகம் படம் வெளிவருவதில்லை. வியாபாரத்திற்காக நிறைய படங்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை. உலகத்தினுடைய அத்தனை சாராம்சங்களும் 3,6,9 என்கிற நம்பரில்தான் நடக்கும், இதற்குள்ளே தான் நம்ம வாழ்க்கை அடங்கியிருக்கு. இதனை கதைக்களமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் என்று சொல்லும் போது 'மூளைகாரர் என்று சொல்வதை விட மூளை இல்லாத ஒரு ஆள் இந்த படத்தை எடுக்க முடியாது என்று சொல்லலாம்' என்று பேசினார்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“விஷாலின் ரத்னம் படம் மட்டும் தான் ஒரு நொடி படத்திற்கு போட்டி” - ஆரி அர்ஜுனன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
aari arjunan speech in oru nodi press meet

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு நொடி’. எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார்.  இந்தப் படம் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் டீசரும் ட்ரைலரும் ஒரே நாளில் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடபெற்றது. இதில், நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி.வி.குமார், நடிகரும், அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா, எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.‌

அப்போது ஆரி அர்ஜுனன் பேசுகையில், “இந்தப் படக் குழுவினருக்கு இதுவரை தெரியாத ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். இப்போதுதான் ட்விட்டரை பார்த்தேன். 'அரண்மனை 4' படத்தின் வெளியீடு மே மூன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு நொடி படத்திற்கு போட்டியில்லை. உங்களுக்கு விஷால் நடித்திருக்கும் 'ரத்னம்' படம் மட்டும் தான் போட்டி.

தமன்- ஈரோடு மகேஷ்- நான் நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் ஒரு கதாநாயகனின் வெற்றி என்பது ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பெரிய போராட்டத்தைப் போன்றது. ஏனெனில் நடிகர்கள் உடம்பை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். சாப்பிட வேண்டும். வாய்ப்புகளைத் தேடி ஓட வேண்டும். நல்ல படைப்புகள் வெளியாக வேண்டும். எனக்கும், தமனுக்கும் எங்களைப் போன்றவர்களுக்கும்  என்ன பிரச்சனை என்றால், கடைசி நிமிடம் வரை வேலை செய்ய வேண்டிய சூழல் உண்டு.‌ படத்தின் போஸ்டர் ஒட்டும் வேலையைக் கூட தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவரும் செய்வார்கள். ஆனால் நாயகன் என்பவர் திரையரங்கில் படம் ஓடும் கடைசி நாள் வரை வேலை செய்து கொண்டிருப்பார்.

'சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்காதீர்கள்' என்று விஷால் நல்ல நோக்கத்தில் தான் சொன்னார். ஆனால் பலரும் அதனை வேறு விதமாக புரிந்து கொண்டார்கள். ஆனால் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள். சின்ன பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம், என்றில்லை. நல்ல கன்டென்ட் உள்ள படத்திற்கு மக்கள் எப்போது ஆதரவு தர தயாராகவே இருக்கிறார்கள். 'மஞ்சுமல் பாய்ஸ்', 'காந்தாரா' போன்ற படங்கள் பெரிய வசூலை தமிழில் பெற்றிருக்கிறது. நிறைய நல்ல படங்கள் இங்கு ஓடுவதற்கு மிக முக்கியமான காரணம் நல்ல கன்டென்ட்தான். நல்ல கதை, நல்ல திரைக்கதை, நேர்மையான உழைப்பு, இவையெல்லாம் ஒன்றிணைந்தால்.. அதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்” என்றார்.

Next Story

உழைக்கும் பெண்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஆரி

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
aari arjunan gift to 10 working womens

நடிகர் ஆரி அர்ஜுனன் திரைப்படங்களை தவிர்த்து ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய தாயின் நினைவாக உழைக்கும் பெண்களுக்கு தங்க நாணயம் கொடுத்து மகிழ்ந்துள்ளார். 10 பெண்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுல்ள அவர், “ஒவ்வொரு மகளிர் தினம் வரும் போதெல்லாம் பெண்களை கொண்டாடுறோம். வாழ்த்து சொல்றோம். அதைத் தாண்டி என்ன செய்றோம் என்ற கேள்வி ஒவ்வொரு மார்ச் மாசம் வரும்போதும் எனக்குள்ளே இருந்திட்டே இருக்கும். அந்த வகையில் இந்த மார்ச் மாசம், இந்த சமூகத்திற்கு வேலை செய்யக்கூடிய பெண்களை நம்ம ஏதோ ஒரு வகையில் மரியாதை செய்யணும் என்ற நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் சார்பாக ஒரு சின்ன முயற்சி.

aari arjunan gift to 10 working womens

எங்க அம்மாவின் நினைவாக ஒவ்வொரு வருஷமும் தொடர திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சர்ப்ரைஸை நோக்கி தான் வாழ்க்கையே நடந்துக்கிட்டு இருக்கு. அந்த வகையில் பெண்களை கௌரவித்து சர்ப்ரைஸாக ஒரு கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி. உழைக்கும் பெண்களையும் சமூக மாற்றத்திற்காக உழைக்கக் கூடிய பெண்களின் வாழ்வை மாற்றும் முயற்சியாக எடுக்க இருக்கோம்” என்றார். பின்பு தூய்மைப் பணியாளர்கள் 3 பேர், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் 3 பேர், சாலையில் கூழ் கடை வைத்திருக்கும் 2 பேர் மற்றும் அவர் நடித்து வரும் ‘ரிலீஸ்’ படத்தின் படப்பிடிப்பில் பாத்திரம் கழுவும் 2  பேர் என மொத்தம் 10 பெண்களை நேரில் சந்தித்து தங்க நாணயம் பரிசாக வழங்கினார் ஆரி அர்ஜுனன்.