இப்படத்தை தொடர்ந்து 171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். வருகிற ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 நடிக்க ரஜினி ஓகே சொல்லியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படமான 172வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாகவும், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பாக லலித் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாரி செல்வராஜ், தற்போது வாழை படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இதுமட்டுமல்லாமல் தனுஷுடன் மீண்டும் ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.