ADVERTISEMENT

வெங்கட் பிரபு தாயார் மரணம்... ‘மாநாடு’ படக்குழு எடுத்த முடிவு!

12:25 PM May 11, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாநாடு'. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. படத்தின் முதல் பாடல் ரம்ஜான் தினமான மே 14ஆம் தேதி வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (10.05.2021) காலமானார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் இந்தத் துக்கத்தில் பங்கெடுக்கும் விதமாக, பாடல் வெளியீட்டை வேறொரு தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது ‘மாநாடு’ படத்தின் முதல் பாடல், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் மறைவின் வருத்தத்தில் பங்குகொள்ளும் பொருட்டு, இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம். கொண்டாட்டத்தையும் தாண்டி கவனமாக இருங்கள். விரைந்து மீள்வோம். நன்றி சகோதரர்களே" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT