வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார். இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்பு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் இந்தப்படம் உருவாவதாக படக்குழு சொல்கிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஷூட்டிங் போகாததால் படம் அவ்வளவுதான் டைட்டில் அறிவிப்போடு கைவிடப்பட்டது என்று செய்திகள் பரவ தொடங்கின. ஆனால், படம் கைவிடப்படவில்லை படத்தின் முன் தயாரிப்பில் இருக்கிறது படக்குழு என்று தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். அதை போலவே சிம்புவும் தன்னுடைய உடல் எடையை குறைக்க லண்டன் சென்றிருந்தார். தன்னுடைய தம்பியின் திருமணத்திற்காக திரும்பியபோது வெளியான சிம்புவின் புகைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன்-25ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. பாடலுடன் சில முக்கியமான காட்சிகளும் இங்கே படமாக்கப்பட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமூ வலைதளங்களில் அப்பாடா ஒருவழியா படத்தை தொடங்கிட்டாங்க என்று குஷியில் இருக்கின்றனர் சிம்பு ரசிகர்கள்.