ADVERTISEMENT

"சாரி மச்சி பார்கவ்  செத்துட்டான் " -  இணையத்தில் வைரலாகும் லோகேஷின் பதிவு 

12:42 PM Jun 09, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த லோகேஷிடம் நடிகர் சாந்தனு “உங்களின் மல்டி யூனிவெர்சில் மீண்டும் பார்கவ் வருவதற்கான சாத்தியம் ஏதும் இருக்கிறதா எனக் கேட்டார். இதற்கு பதிலளித்த லோகேஷ் சாரி மச்சி பார்கவ் செத்துட்டான் " எனக் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தனது முந்தைய படங்களை இணைத்து அடுத்தடுத்த படங்களை லோகேஷ் யூனிவெர்ஸ் என்ற முறையில் இயக்கி வருகிறார். ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் பார்கவ் என்ற கதாபாத்திரத்தில் சாந்தனு நடித்திருப்பார். ஆனால் அந்த படத்தின் முடிவில் பார்கவ் கதாபாத்திரம் கொல்லப்படும் நிலையில் சாந்தனு இவரது கேள்வியை எழுப்பியுள்ளார். இதற்கு லோகேஷ் அளித்த பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT