ADVERTISEMENT

“உங்களுக்கும் ஜிவிஎம்க்கும் என்னதான் பிரச்சனை?”- பதிலளித்த கார்த்திக் நரேன்

04:38 PM Feb 08, 2020 | santhoshkumar

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய பின்னர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் நரகாசுரன் என்றொரு படத்தை இயக்கியிருந்தார். ஆனால், அந்த படம் ரிலீஸாவதில் பல சிக்கல்கள் இருப்பதால் தற்போதுவரை ரிலீஸாகாமல் உள்ளது. இதனையடுத்து அருண்விஜய் மற்றும் பிரசன்னாவை வைத்து மாஃபியா என்றொரு படத்தை இயக்கியுள்ளார். இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற ஃபிப்ரவரி 21ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதனிடையே நமக்கு மாஃபியா படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவரிடம் நரகாசுரன், மாஃபியா படங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் உங்களுக்கும் ஜிவிஎம்க்கும் என்னதான் பிரச்சனை என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கார்த்திக் நரேன், “அந்த ப்ராஜெக்ட் தற்போது பாஸிட்டிவ்வாக நிறைய விஷயங்கள் நடந்துக்கொண்டிருக்கிறது. தற்போது நான் அந்த படம் குறித்து நிறைய பேசவும் விரும்பவில்லை. ஒரு திரைப்படமாக அப்படம் ரெடியாக இருக்கிறது. அதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களாக இருக்கட்டும், நடித்த நடிகர்களாக இருக்கட்டும் அரவிந்த் சாமி சார் போன்ற அனைவருக்கும் அந்த படத்தின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. மாஃபியா ரிலீஸான பின்பு அந்த படம் ரிலீஸாகும் என நம்புகிறோம்.

எதைபற்றி நான் அப்டேட் செய்தாலும் அந்த படம் குறித்து கேட்பார்கள். அது சில நேரங்களில் வருத்தத்தை தந்தாலும், சில நேரங்களில் மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. மக்கள் அந்த படத்தை பற்றி இன்னும் கேட்கும்போது யாரும் மறக்கவில்லை என்று நினைக்கையில் சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.

அதேபோல நாடகமேடை படம் குறித்து கேட்டதற்கு பதிலளிக்கையில், “ அது எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு படம். 12ஆம் வகுப்பு படிக்கும் பையனுக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே நடப்பதை வைத்து உருவாக்கப்பட்டது. அதனால் என்னுடைய சுய பாதிப்பு படத்தில் அதிகமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT