Skip to main content

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா... தொடங்கப்பட்ட ஷூட்டிங்!

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 

gvm with surya

 

 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து, ஓடிடியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சூரரைப்போற்று. மேலும் இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 

இந்த படத்தில் நடித்திருந்த சூர்யாவின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். அவர் அந்த கதாபாத்திரமாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று ரசிகர்களும், விமர்சகர்களும் கூறியுள்ளனர்.

 

தற்போது நெட்ஃபிளிக்ஸுக்காக உருவாகும் நவரசா என்னும் அந்தாலஜி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அண்மையில் சூர்யா தெரிவித்திருந்தார்.

 

வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நவரசா அந்தாலஜியிலுள்ள ஒரு குறும்படத்திற்காக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்று தொடங்கப்பட்டுள்ள இப்பட ஷூட்டிங்கில் சூர்யா நன்றாக நடித்திருக்கிறார் என்று ட்விட்டரில் பி.சி. ஸ்ரீராம் பாராட்டியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அசைவம் ஊட்டி விடுவாரு” - கண்ணீர் மல்க சூர்யா அஞ்சலி!

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Surya tribute to Vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராகத் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 

சூர்யா பேசியதாவது, “அண்ணனோட இந்த பிரிவு ரொம்ப துயரமானது. மனசு அவ்ளோ கஷ்டமாயிருக்கு. ஆரம்ப காலத்தில் நான் நடித்த படங்கள் எனக்கு பெரிய பாராட்டை பெற்றுத் தரவில்லை. பெரியண்ணா படம் அவரோட சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைச்சது. ஒவ்வொரு நாளும் சகோதர அன்போடு இருப்பாரு, அப்பாவிற்காக வேண்டிக்கொண்டு நான் அசைவம் சாப்பிடுவதில்லை, அப்ப அவர் ஒரு வார்த்தையை உரிமையா சொல்லி ஏன் சைவம் சாப்பிடுறேன்னு திட்டி அவருடைய தட்டிலிருந்து எடுத்து சாப்ட வச்சாரு, நடிக்கிறவனுக்கு உடம்பில் சத்து வேண்டும்னு ஊட்டிவிடுவாரு”

“அவரோட நடிச்ச நாட்களில் பிரமிச்சு பார்த்தேன். அவரை இலகுவாக அனைவரும் அணுகலாம். கலைநிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றபோது அவருடைய உழைப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவர் மாதிரி யாரும் கிடையாது. இறுதி அஞ்சலியில் அவர் முகம் பார்க்க முடியாதது என்பது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சிக்காரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். விஜயகாந்த் இறந்தபோதே சூர்யா வீடியோ வெளியிட்டு தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். 

Next Story

சல்மான் கான் நடிப்பில் ரீ மேக்காகும் அஜித் படம்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

ajith yennai arindhal hindi remake with salman khan

 

கெளதம் மேனன் - அஜித் கூட்டணியில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் 'என்னை அறிந்தால்'. ஏ.எம். ரத்னம் தயாரித்திருந்த இப்படத்தில் த்ரிஷா, அருண் விஜய், அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

 

இந்த நிலையில் இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியிலும் கௌதம் மேனனே இயக்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

 

இதற்கு முன்னதாக அஜித் நடித்த வீரம் படத்தை ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்ற தலைப்பில் இந்தியில் ரீமேக் செய்தார் சல்மான் கான். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் சல்மான்கான் ரசிகர்களைத் திருப்திப்படுத்தியது. வசூலிலும் நல்ல வரவேற்பு பெற்றதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. 

 

கௌதம் மேனன், இதற்கு முன்னதாக அவர் இயக்கிய மின்னலே, விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களை இந்தியில் ரிமேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.