ADVERTISEMENT

“இனிய நண்பனை இழப்பது பெருந்துயர்” - கமல்ஹாசன் உருக்கம்

12:45 PM Jun 30, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கமல்ஹாசனுக்கு இந்தியாவை போன்று உலகின் பல்வேறு நாடுகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கமலுக்கு ரசிகர் மன்றம் அமைத்து அதன் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் மலேசியா கமல் நற்பணி இயக்கத்தின் தலைவர் டத்தோ இந்திரசாகரன் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் டத்தோ இந்திரசாகரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,"எனது நெடுங்கால நண்பரும், கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் மலேசியத் தலைவருமான டத்தோ இந்திரசாகரனின் மறைவு தாங்கொணாத் துயரத்தை அளிக்கிறது. நற்பணி இயக்கத்தின் சார்பாக மலேசியாவில் உள்ள பல தமிழ்ப் பள்ளிகளுக்கும், வரிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உதவி வந்தார்.

தமிழ்ப் பள்ளிகளில் வாசிப்புக் குடில் அமைப்பது, மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குவது, இரத்த தான நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது என மலேசிய மண்ணில் அவர் செய்த சேவைகள் அளவீடற்றவை. செபஸ்தியார் கலைக் கூடத்தின் புரவலராகத் திகழ்ந்த இந்திரசாகரன் போன்ற நற்பணி நாயகனை, மிகச்சிறந்த ரசிகனை, இனிய நண்பனை இழப்பது பெருந்துயர். டத்தோ இந்திரசாகரனை இழந்து தவிக்கும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT