Skip to main content

“எனக்கு பிறகு வந்த நடிகர்களெல்லாம்...” - பிறந்தநாள் விழாவில் ஜெயம் ரவி உருக்கம் 

Published on 10/09/2022 | Edited on 10/09/2022

 

Jayam Ravi

 

ஜெயம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி, உச்ச நட்சத்திரமாக இன்று உயர்ந்திருக்கும் ஜெயம் ரவி, தன்னுடைய பிறந்தநாளை இன்று பத்திரிகையாளர்களுடன் கொண்டாடினார்.

 

அந்த சந்திப்பில் பேசிய ஜெயம் ரவி, “வழக்கமாக என்னுடைய பிறந்தநாளன்று இதுபோல நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்ததில்லை. ஆனால், இதுவரை ஏன் சந்திக்கவில்லை என்று வருத்தப்படுகிறேன். நான் சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. என்னுடைய இத்தனை வருட பயணத்தில் பத்திரிகையாளர்கள் முக்கிய அங்கமாக இருந்திருக்கிறீர்கள். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் இன்று உங்களைச் சந்தித்திருக்கிறேன். 

 

இந்த 20 வருடங்களில் 25 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறேன். பிற நடிகர்களோடு ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. எனக்குப் பிறகு வந்த நடிகர்கள் 45 படங்கள்வரை நடித்துவிட்டனர். எனக்கு எண்ணிக்கை முக்கியமில்லை; படங்களின் தரம்தான் முக்கியம். இது எனக்கு அப்பா சொல்லிக்கொடுத்தது.

 

ஜெயம் படம் மிகப்பெரிய ஹிட்டாகி 150 நாட்கள் ஓடிய பிறகும் அடுத்த 8 மாதங்கள் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்தேன். எனக்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது. ‘ஹிட் கொடுத்துட்டோம்னு அவசர அவசரமா படம் பண்ணாத, நல்ல படம் வரும்வரை வீட்டில் உட்காரு, ஒன்னும் தப்பில்லை’ என்று அப்பா சொன்னார். அதை  இன்றுவரை பின்பற்றுகிறேன். அதனால்தான் என்னுடைய தோல்விப்படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 

 

ரசிகர்கள் எனக்கு ஒருபுற பலம் என்றால் பத்திரிகையாளர்கள் மற்றொருபுற பலம். உங்களுடைய பாராட்டும் விமர்சனமும்தான் என்னை தன்னடக்கத்தோடு வைத்திருக்கிறது. உங்களுடைய ஆதரவை எனக்கு தொடர்ந்து கொடுங்கள்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகர் மரணம் - வீட்டுக்குச் சென்று ஜெயம் ரவி ஆறுதல்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
jayam ravi condolence to his fan passed away

சென்னை எம்.ஜி.ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்தவர் ராஜா (வயது 33). சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

ராஜாவின் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜா வீட்டுக்குச் சென்று, ராஜாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்தார். மேலும் ராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். 

ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர், அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளர்.  

Next Story

ஜெயம் ரவிக்கு பதில் அருண் விஜய்; தொடர்ந்து நடக்கும் மாற்றம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
maniratnam kamal in thug life arun vijay replaced jayam ravi character

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ. வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் முடிந்த பின்பு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் நிவின் பாலியிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக முணுமுணுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு பதிலாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே மணிரத்னத்துடன் செக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் பாலா இயக்கும் வணங்கான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.