தனுஷுடனான விவாகரத்தை அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பயணி என்ற ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளார். ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளியான ’3’, ’வை ராஜ வை’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'ஓ சாத்தி சால்' என்ற இந்திப் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் முதல் முறையாக பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். உண்மையான காதல்கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கவுள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேற்று இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ஒர்க் மோட் ஆன் என்ற ஹேஸ்டேக்கையும் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த சினிமா வட்டாரங்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் இளையராஜா இசையமைக்க உள்ளதாக வந்த தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த சந்திப்பு அதனை உறுதி செய்துள்ளதாக கூறி வருகின்றனர். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.