Skip to main content

"தாத்தா இருந்திருந்தால் இதை சொல்லியிருப்பார்" - கலைஞரை நினைவு கூர்ந்த அருள்நிதி

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Grandpa would have said this if he had been there; Arulnidhi in memory of  kalaignar

 

அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை சை.கெளதமராஜ்  எழுதி இயக்கியுள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக படக்குழுவினரை சந்தித்தோம். படக்குழுவினர் பல்வேறு சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.

 

கதாநாயகன் அருள்நிதி பேசியதாவது: கதை சிறப்பாக இருக்கும்போது ரசிகர்களால் அது நிச்சயம் வரவேற்கப்படும். படம் முழுவதும் நான் மூர்க்கத்தனமாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் கூறினார். மக்களால் இந்தப் படம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன். நான் இந்த நிலையில் இன்று இருப்பதற்கு ரசிகர்கள் தான் காரணம். அவர்கள் என்னிடம் த்ரில்லர் பாணியிலான படங்களை எதிர்பார்த்ததால் தொடர்ந்து த்ரில்லர் படங்கள் செய்தேன். ஆனால் ஒரே மாதிரி படங்கள் செய்தால் ரசிகர்களுக்கும் போர் அடித்துவிடும். அதனால் என்னுடைய ஜானரை மாற்றினேன்.

 

இந்தக் கதைக்குள் கமர்ஷியல் விஷயங்களையும் தாண்டி ஒரு நல்ல மெசேஜ் இருக்கிறது. உதயநிதி அண்ணன் இன்னும் படம் பார்க்கவில்லை. டீசர் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்பாவும் இந்தப் படத்தைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறார். பாண்டிராஜ் சாரிடம் நான் தினமும் பேசுவதால் படம் குறித்த அனைத்தையும் அவரிடம் சொல்லிவிட்டேன். மாமன்னன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சூப்பராக இருக்கிறது. கோபம் இல்லாமல் இருந்திருந்தால் நான் இன்னும் பெரிய இடத்துக்கு போயிருப்பேன். அனைவருமே கோபத்தால் தான் பல விஷயங்களை இழக்கிறோம். தாத்தா கலைஞர் இந்தப் படத்தைப் பார்த்திருந்தால் அவருக்கு மிகவும் பிடித்திருக்கும்.

 

வம்சம் படத்தை அவர் பார்த்துவிட்டு எனக்கு ஒரு கடிகாரம் பரிசளித்தார். "இது நீ நன்றாக நடித்ததற்காக இல்லை. இனி நன்றாக நடிக்க வேண்டும் என்பதற்காக" என்றார். இந்தப் படத்தை அவர் பார்த்திருந்தால் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று நிச்சயம் சொல்லியிருப்பார். எங்களுடைய வேலையை நாங்கள் சரியாகச் செய்துள்ளோம். நான் வளர்ந்த விதமும் இந்தப் படம் பேசும் விஷயமும் ஒரே மாதிரி இருந்தது. இந்தப் படம் தேவையில்லாமல் யாரையும் உயர்த்தியும் பேசவில்லை தாழ்த்தியும் பேசவில்லை. உண்மையை மட்டுமே பேசியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நல்ல இயக்குநர்கள் கிடைத்தது எனக்கு லக்கி தான்” - நிவேதிதா சதீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Nivedhithaa Sathish Interview

சில்லுக்கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன் போன்ற படங்களில் நடித்த நிவேதிதா சதீஸ், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அவர் நம்மோடு பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

சில்லுக்கருப்படி படம் தான் திரையரங்கில் வெளியான என்னுடைய முதல் படம். இன்றும் சோசியல் மீடியாவில் யாராவது ஒரு க்ளிப்பிங்க்ஸ் எடுத்து ஷார்ட்ஸா ஷேர் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.  அதற்கடுத்தபடியாக வெளியான செத்தும் ஆயிரம் பொன்னும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, நல்ல இயக்குநர்கள் எனக்கு அமைந்ததை நான் எனக்கு கிடைத்த லக்கியாக பார்க்கிறேன். 

ஆக்ஷன் படங்களில் நடிக்கணும், பீரியட்ஸ் படங்களில் நடிக்கணும், தனுஷ் கூட நடிக்கணும் இப்படி தனித்தனியாக ஆசை இருந்தது. இதெல்லாமே சேர்த்து ஒரே படமாக கேப்டன் மில்லர் அமைந்துவிட்டது. கேப்டன் மில்லர் படத்தில் பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் நான் மட்டும் சின்ன வயது பிள்ளையாக இருப்பேன். எல்லோரும் என்னை கடைக்குட்டி என்றுதான் கூப்டுவாங்க. 

இந்த படத்திற்காக என்னை மாதிரியான ஒரு பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். எதுக்கு என்னை மாதிரியான பொண்ணு நானே நடிக்க தயாராத்தானே இருக்கேன்னு நினைச்சேன். அப்படியாக எனக்கு வாய்ப்பு வந்தது. படத்தில் என் கேரக்டருக்காக நிறைய ஹாலிவுட் படங்களை பார்க்கச் சொன்னாரு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்து முடித்ததாக நம்புகிறேன்.

Next Story

“ப்ளூ ஸ்டார் படத்திற்கு இது தேவைப்படவில்லை” - ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Blue Star Cinematographer Tamil Azhagan Interview | 

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்தும் ப்ளூ ஸ்டார் படம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் குறிப்பாக ஒளிப்பதிவை பாராட்டி நிறைய பேர் போன் பண்ணி வாழ்த்தினார்கள். இதெல்லாம் ரொம்ப நுணுக்கமாக செய்த விசயங்கள் என்று படத்தில் நான் நினைத்த பல விசயங்களை கவனித்து நிறைய பேர் சொன்னது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. கதைக்களம் அரக்கோணம் என்பதால் அங்கே என்ன இருக்கிறதோ, கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் படத்தை எடுத்தாக வேண்டும். அதுதான் நேட்டிவிட்டியோடு இருக்கும் என்பதால் அரக்கோணத்திற்கு அதிக வெயில், ரயில்வே ஸ்டேசன் இதுதான் ஸ்பெசல். அதையே படம் முழுவதும் பயன்படுத்தினோம்.  

எங்க ஃப்ரேம் வைத்தாலும் இது அரக்கோணம் என்று தெரியவேண்டும். அதில் ரொம்ப கவனமாகவே இருந்தோம். அதற்கு வெயில் ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. படத்தில் நடித்தவர்கள் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் மேக்கப் போட்டோம். பிறகு வெயிலுக்கு அவர்களெல்லாம் மேட்ச் ஆகிட்டாங்க, பில்டப் கொடுக்க, சில எமோஷ்னல்ஸ் கன்வே பண்ண ஸ்லோமோசன் சீன்கள் தேவைப்படும், அதை எடுத்து வைத்துக்கொள்வோம், தேவைப்பட்டால் பயன்படுத்துவோம், இந்த படத்தில் அது தேவைப்படவே இல்லை. 

கதையை முதலில் படித்தபோது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையில் காதல் சார்ந்த போர்ஷன் ரொம்ப சூப்பரா இருந்தது. அதையே ஒரு தனிப்படமாக எடுக்கலாம் அந்த அளவிற்கு அழகான காதல் கதையும் உள்ளது. படத்திற்குள் சேராத ரஞ்சித் - ஆனந்தி ஜோடி நிஜ வாழ்க்கையில் அசோக்செல்வன் - கீர்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அது ரொம்ப ஆச்சரியமாகவும் இருந்தது. இயக்குநரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ரஞ்சித் அண்ணா உதவி இயக்குநராக சென்னை:28 படத்துல வேலை பார்க்கும் போது அவரை பைக்ல பிக் அப் டிராப் பண்றது ப்ளூ ஸ்டார் இயக்குநர் ஜெய்குமார். இன்று ரஞ்சித் அண்ணா தயாரிக்க, ஜெய்குமார் படம் பண்ணது ரொம்ப சூப்பரான அழகான விசயமாக நான் பார்க்கிறேன்.