ADVERTISEMENT

”இதுவெல்லாம் இந்தத் தலைமுறைக்கு புரியாது” - துல்கர் சல்மான் பேச்சு

05:27 PM Jul 27, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் சீதா ராமம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா மந்தனா, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், தருண் பாஸ்கர், பூமிகா சாவ்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்வப்னா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில், ''நான் இதற்கு முன்னர் நிறைய காதல் கதைகளில் நடித்திருந்தாலும், இதுபோன்ற வித்தியாசமான காதல் கதையில் நடித்ததில்லை. கதை நடக்கும் காலகட்டம், கதைக்களம், கதாபாத்திர பின்னணி எனப் பல அம்சங்கள் சிறப்பாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதிலும் காதலை, கடிதம் மூலம் வெளிப்படுத்தும் 1960 காலகட்ட அனுபவங்கள் மிகச் சிறப்பாக 'சீதா ராமம்' படத்தில் இடம்பெற்றிருக்கிறது. தற்போதுள்ள தலைமுறைக்கு கடித இலக்கியம், கடிதம் எழுதுவது என்பதே புரியாத விஷயம். படத்தில் இடம் பிடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பானவை. இயக்குநர் எல்லா கதாபாத்திரங்களையும் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். கலைஞர்கள் அனைவரும் இயக்குநரின் கற்பனையை படைப்பாக உருவாக்க ஒத்துழைப்பு வழங்கினோம்” எனத் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT