ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்ற மாதம் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் கதிர், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக பா.ரஞ்சித் இப்படத்தை தயாரித்திருந்தார். ரஜினி, கமல் மற்றும் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் படத்தை பாராட்டியிருந்த நிலையில் தற்போது இப்படத்தை தனுஷ் பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். மேலும் தனது அடுத்தப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார் என்றும், படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார் என்றும் அறிவித்துள்ளார்.
Show comments