Skip to main content

பரியேறும் பெருமாளுக்கு பாட்டு எழுத மறுத்த யுகபாரதி! 

Published on 02/10/2018 | Edited on 02/10/2018

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் இடம் பெற்ற 'கருப்பி' பாடல் பரவலாகப் பேசப்படுகிறது. இசையைத்தாண்டி அதன் கனமான வரிகள் அனைவரின் மனதிலும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளன. இந்தப் பாடல் உருவானது குறித்து அதை எழுதிய இயக்குனர் மாரி செல்வராஜ் நம்மிடம் பகிர்ந்தபொழுது கூறியது...

 

yugabharathi



"இந்தப் பாட்டை முதலில் யுகபாரதி அண்ணன் எழுதணும்னுதான் விரும்பினேன். அவர் கூட உட்கார்ந்து இருவரும் பாடல் குறித்து டிஸ்கஸ் பண்ணினோம். நான் அதை விவரிச்சேன், என்ன மாதிரி வரிகள் வேணும், என்ன விஷயங்கள் சொல்லப்பட வேண்டும்னு சொல்லிக்கிட்டே இருந்தேன். கிட்டத்தட்ட அந்த விஷயங்கள் எல்லாம் வரிகளாகவே இருந்தன. இதை உணர்ந்த யுகபாரதி அண்ணன், "மாரி, இந்தக் கதையிலும் சூழ்நிலையிலும் என்னை விட நீ சுதந்திரமாகவும் காத்திரமாகவும் இருக்க. நீ சொல்லி, அதை நான் எழுதி என் பேரை போடுறதுக்கு பதிலா, நீயே இதை எழுது" என்றார். நான், "அண்ணே, இல்லண்ணே நீங்க எழுதுங்க"னு சொன்னேன். அவர், "இல்ல, நான் எழுதல. நீ எழுதுறதுதான் சரியா இருக்கும்"னு சொன்னார். அப்படித்தான் இதை நான் எழுதினேன். இந்தப் பாடல் சொல்ற அரசியல் என்பது அதில் இருக்குற உண்மைதான். அதில் கேட்கப்படும் கேள்விகள் எல்லாம் அந்த மக்கள் தினம் தினம் கேட்கும் கேள்விகள்தான்". 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"கொடுமையிலும் கொடுமை" - கொதித்தெழுந்த திரைப் பிரபலங்கள்

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

seenuramasamy, karthick subbaraj, yuga bharathi about nanguneri issue

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தம்பதி முனியாண்டி மற்றும் அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் சில தினங்களுக்கு முன்பு இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு, நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை ஒரு வார காலம் பள்ளிக்கு போகாமலே இருந்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோரைத் தொடர்பு கொண்டு மகனைப் பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்த போது பள்ளியில் சில மாணவர்கள் தன்னை தாக்குவதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த தொந்தரவு செய்த மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2  மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜி.வி. பிரகாஷ், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் உள்ளிட்ட பிரபலங்களைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவில், "கொடூரமான வெட்கக்கேடான பரிதாபகரமான சாதி வெறியர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இதனிடையே சீனு ராமசாமி, "நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை உடன்படிக்கும்  பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய வெறிச் செயல் கொடுமையிலும் கொடுமை. காயம்பட்ட மாணவர்களுக்கு நீதிதான் சமூகநீதி. மாணவச் செல்வங்கள் உடல்நலம் தேறி விரைந்து இல்லம் வரவேண்டுகிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

 

மேலும் பாடலாசிரியர் யுகபாரதி, "சாதீய சமூகத்தின் கொஞ்சமும் மாறாத 'படி'நிலைகள், கோபத்தையும் கண்ணீரையும் சேர்த்தே கேட்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிரந்தர தீர்வும் இந்த மண்ணில் எப்போதுதான் கிடைக்குமோ?" எனத் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

 


 

Next Story

"பழசெல்லாம் தூக்கி வீச கேட்குதா என் பாச" - ‘மாமன்னன்’ லிரிக் வீடியோ

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Manna Maamanna Lyric video

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளன. இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது. உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இப்படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடலாசிரியரும், தமிழ் ராப் பாடகருமான தெருக்குரல் அறிவு பாடியிருக்கிறார். “கேக்குதா என் பாச... எனக்குள்ளே ஒரு ஓச” எனத் தொடங்கும் இப்பாடலை அவரே எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளி வந்த படத்தின் அனைத்து பாடல்களின் லிரிக்கல் வீடியோவுமே வண்ணத்தில் இல்லாமல் கருப்பு வெள்ளையிலேயே வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பதும் படம் வெளியான பிறகே தெரிய வரும் என ரசிகர்கள் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.