Skip to main content

விஜயகாந்தின் ஃபேவரிட்... திடீர் எம்.எல்.ஏ... லாங் ப்ரேக்குக்குப் பிறகு ஆன்ஸ்கிரீனில் அருண்பாண்டியன்...

Published on 05/08/2020 | Edited on 05/08/2020
arun pandiyan

 

 

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் ஹீரோக்களின் வரிசையில் முக்கியமான இடத்தை பிடித்திருந்தவர் அருண் பாண்டியன். 1985ஆம் ஆண்டு சிதம்பர ரகசியம் என்னும் படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானவர் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்’ போன்ற படங்களில் ஆக்‌ஷனில் அதிரடி காட்டி ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். விஜயகாந்திற்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர் சினிமாவிலும் அவருடைய பானியை பின்பற்றினார். இருவரும் இணைந்தும் நடித்துள்ளனர். இவர் இயக்கிய ‘தேவன்’ படத்தில் அருண் பாண்டியனுக்காக விஜயகாந்த் கௌரவ தோற்றத்தில் நடித்தார். 

 

2011ஆம் ஆண்டு தமிழக தேர்தலில் ஜெயலலிதாவுடன், விஜயகாந்த் கூட்டணி வைத்தபோது அவருடைய தேமுதிக கட்சியின் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். இவருடைய திடீர் அரசியல் அவதாரம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. அதேபோல, 2016ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்து அதிமுகவில் இணைந்தார். இதுவும் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதற்கு முன்பே தீவிர சினிமாவிலிருந்து ஒதுங்கிக்கொண்ட அருண் பாண்டியன் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் முக்கிய அங்கமாக செயல்பட்டார். பல படங்களை வெளியிட்டும், உரிமையை வாங்கியும் சினிமாவை தன்னுடன் வைத்துகொண்டு வந்தார். பின்னர், ஏ&பி என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். பல வருடங்கள் கழித்து படம் முழுவதும் நடிகராக நடிக்க உள்ளார் அருண் பாண்டியன். 

 

மலையாள சினிமாவில் ஹிட் அடித்த ‘ஹெலன்’ படத்தின் தமிழ் ரீமேக்கை பெற்ற அருண் பாண்டியன், அந்த படத்தில் அவரும் அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு, கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டுள்ளது. கரோனா பிரச்சனைகள் முடிவடைந்தவுடன் முழுவதுமாக ஷூட்டிங் முடிக்கப்பட்டு ரிலீஸாகிறது...

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.