ADVERTISEMENT

இந்திய சினிமாவில் கால் பதிக்கும் ரஸ்ஸல்...

10:18 AM May 06, 2019 | santhoshkumar

நேற்றுடன் ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. மும்பை, சென்னை, டெல்லி, ஹைதரபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நேற்று நடைபெற்ற போட்டியில் கேகேஆர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின, கேகேஆர் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் தகுதி பெற்றிருக்கும். ஆனால், அந்த அணியின் நாயகனான ரஸ்ஸல் நேற்று பூஜியம் ரன்னில் ஆட்டமிழக்க கேகேஆர் அணியால் ஒரு மிகப்பெரிய ஸ்கோரை பெற முடியவில்லை. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாகி வெற்றிபெற்று. பட்டியலில் முதலிடம் பிடித்துவிட்டது மும்பை அணி.

முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் நாளை மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் டெல்லி-ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

கடைசி கட்டத்தில் தோல்வியை சந்தித்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது கொல்கத்தா அணி. வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஆண்ட்ரு ரசல் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்துள்ளார். இந்த செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், ‘இந்தி பாடல் ஒன்றின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளேன். அந்த பாடல் விரைவில் வெளியாகும்.’ என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT