ADVERTISEMENT

‘கே.ஜி.எஃப்’, ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்கள் ஓடினாலும் லாபம் தராது - பிரபல நடிகர் பேச்சு

10:40 AM Apr 25, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

எஸ்.ஆர் ஹர்ஷித் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மெய்ப்பட செய். ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடிக்க, மதுநிக்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். வேலன். சுயநலத்துக்காக பல பாவங்களைச் செய்து அதிகாரத்தையும், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையும் பயன்படுத்தி மக்களோடு மக்களாக கலந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் ஆதவ் பாலாஜி, மதுநிக்கா, ராஜ்கபூர், உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய நடிகர் ராஜ்கபூர், “இந்தப்படத்த மிக அருமையாக எடுத்துள்ளார்கள். இசையமைப்பாளர் பரணி பாடலில் அசத்தியுள்ளார். இப்போதெல்லாம் இப்படி பாடல் கேட்பது அரிதாகிவிட்டது. இந்தப் படம் நடிக்கும் போது மாயாண்டி குடும்பத்தார் படம் ஞாபகம் வந்தது. இயக்குநர் ஒரு நாளில் ஒரு சீன் தான் எடுப்பார். ரசிச்சு எடுப்பார். ’கே.ஜி.எஃப்’ ஓடுச்சு, ’ஆர்.ஆர்.ஆர்’ ஓடுச்சு என்கிறார்கள், ஆனால் அது ஓடி என்ன பயன். அதை நாலு வருடம் எடுத்தார்கள் அதெல்லாம் லாபமே தராது. மைனா 2 கோடியில் எடுத்து பல கோடி லாபம் பார்த்தது. அது தான் படம். ஓடுது ஓடுது என சொல்லும் படத்தில் கதை கேளுங்கள், ஒன்னும் இருக்காது. ஜெய்பீம் எல்லாம் சின்ன பட்ஜெட்டில் எடுத்து உலகத்தையே மிரட்டியது. அது மாதிரி இந்த படமும் வெற்றி பெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT