மாஸ்டர் சுரேஷ் என்ற பெயரில் நடித்து வந்த இவர் பின்பு சூரிய கிரண், என பெயரை மாற்றி கொண்டு இயக்குநராக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். சத்யம், தானா 51, பிரம்மஸ்திரம், ராஜு பாய், அத்தியாயம் 6 போன்ற படங்களை இயக்கினார். இதனைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள அரசி படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இவர் குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குநராக இரண்டு மாநில விரும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் சமீப காலமாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த சூரிய கிரண் (48) இன்று காலமானார். கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் பின்பு வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட அவர் காலை 11 மணியளவில் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவரின் இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.