ADVERTISEMENT

மறைந்த புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அல்லு அர்ஜுன் அஞ்சலி

05:37 PM Feb 03, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்தியத் திரைப்பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து புனித் ராஜ்குமார் உடல் காண்டீவராவில் உள்ள அவரது தந்தை சமாதிக்குப் பக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய நிலையில் படப்பிடிப்பின் காரணமாக பல நடிகர்கள் புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து விஜய் சேதுபதி, விஷால், உதயநிதி ஸ்டாலின் கமல் உள்ளிட்ட நடிகர்கள் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய நிலையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் புனித் ராஜ்குமார் சாமத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். புஷ்பா படத்தின் படப்பிடிப்பு பணியிலும், வெளியிட்டு பணியிலும் பிசியாக இருந்த அல்லு அர்ஜுன் இன்று (3.2.2022) புனித் ராஜ்குமார் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT