ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், திரைத்துறையில் அறிமுகமாகி 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 29 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள அஜித், தற்போது 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "ரசிகர்கள், வெறுப்பவர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆகியோர் ஒரே நாணயத்தின் 3 பக்கங்கள். ரசிகர்களிடமிருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் பக்கச்சார்பற்ற பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். வாழு; வாழவிடு! நிபந்தனையற்ற அன்புடன் அஜித்குமார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Show comments