ADVERTISEMENT

மறைந்த சூடானுக்கு பரிசளித்த ரோகித் ஷர்மா !!

10:55 AM Jul 10, 2018 | vasanthbalakrishnan

இங்கிலாந்திற்கு எதிரான முன்றாம் டி-20 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா தான் அடித்த சதத்தை இறந்த வெள்ளை காண்டாமிருகமான சூடானுக்கு பரிசளித்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான டி 20 தொடரில் இங்கிலாந்து 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகளுடன் 198 ரன்கள் எடுத்து 199 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வைத்தது. அதில் இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா 5 சிக்ஸர் ,11 பவுண்டரிகள் என 56 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அசத்தினார். மேலும் இந்தியா 18.4 ஓவரில் 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்நிலையில் சதம் அடித்து அசத்திய ரோகித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து ரோகித் ஷர்மா தான் அடித்த சதத்தை அரியவகை காண்டாமிருக இனத்திலிருந்து இறுதியாக இறந்து போன சூடான் எனும் ஆண் வெள்ளை காண்டாமிருகத்திற்கு பரிசளித்துள்ளார். உலகம் முழுவதையும் திரும்பி பார்க்கவைத்தது இந்த சூடான் எனும் வெள்ளை காண்டாமிருகத்தின் மறைவு.

இதுதொடர்ப்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தான் அடித்த இந்த சதத்தை இறந்த என் நண்பன் சூடானுக்கு பரிசளிக்கிறேன் என் உருக்கமாக பதிவிட்டுள்ளார் ரோகித்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT